districts

img

தேசிய அளவிலான வூசு போட்டி: கோவை மாணவிகள் சாதனை

கோவை, ஆக.20- பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பதக் கங்களை குவித்து சாதனை படைத் தனர். கோவையைச் சேர்ந்த பள்ளி, மாணவிகள் வேதஸ்ருதி, பவதா ரிணி, பாலஹர்சனி, லட்சுமி பிரபா, மாணவர்கள் ஆகாஷ், அபிசாய் ஜெரோன் ஆகியோர் திண்டிவனத் தில் நடைபெற்ற மாநில அளவி லான வூசு போட்டியில் வெற்றி பெற் றனர். இதைத்தொடர்ந்து அண்மை யில் பீகாரில் நடைபெற்ற 22 ஆவது தேசிய ஜூனியர் போட்டிகளில் கலந்து கொண்டனர். தேசிய அள வில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர்.  இதில் சான்குவாங், ஜியான்சு, குன்சு, நான்குவாங், நன்குன், நந்தாவ், வின் சுங், தாய்ச்சி என பல்வேறு பிரிவு களாகவும், குழு போட்டிகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவி வேதஸ்ருதி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், மற்ற மாணவ, மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்நிலை யில், கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் அப்பாவு வாழ்த்துக்களை தெரி வித்தார். இதைத்தொடர்ந்து செய லாளர் ஜான்சன் மற்றும் நிர்வாகி கள் செல்வராஜ், கணேசன், ராஜன்  ஆகியோர் மாணவ, மாணவிக ளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் களை வழங்கி பாராட்டினர். இதேபோல புனேவில் நடை பெற்ற தேசிய அளவிலான சீனியர் வூசு போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற கல்லூரி மாணவ, மாணவிகளான வெர்ஜின், முத்து ராஜ பாரதி, அகல்யா, முத்து அகில் அரசு ஆகியோருக்கும் வாழ்த்துக் களை தெரிவித்தனர். வெற்றி பெற்ற  அனைவரும் அடுத்து நடைபெற  உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத் தக்கது.