தேசிய அளவிலான கருத்தரங்கம் தருமபுரி, பிப்.12- தருமபுரி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங் கம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளியில் உள்ள பெரியார் பல் கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்த ரங்கம் புதனன்று நடைபெற்றது. முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் செல்வா பாண்டியன் வரவேற்றார். இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து, ‘மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்’ என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கில், முனைவர்கள் குணசேகரன், வெங்கட் ராம ரெட்டி ஆகியோர் உரையாற்றினார். இதில் முனை வர்கள் பிரசாத், கோபாலகிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.