திருப்பூர், புப்.16- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளி யன்று தேசிய குடற்புழு நீக்கும் வாரம் கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 இணைந்து தேசிய குடற்புழு நீக்கும் வாரம் கடைப்பி டித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்கு மார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், கல்லூரியில் உள்ள துறைகளில் மாணவர்களுக்கு மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, மதுகார்த்திக், லோகேஷ், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட்டது.