districts

img

தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், டிச.23 - திருப்பூரில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் திங்களன்று நடைபெற்ற  நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய  இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று,  நுகர்வோர் என்பவர் யார், நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர்  பாதுகாப்பு சட்டம் குறித்த பதாகை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கியமான வீதிக ளில் சென்றனர். இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க  நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.