நாமக்கல், ஜூலை 11- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், திங்களன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி., சின்ராசு மாவட்ட ஆட்சியர் வளாகத் திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்கள் வந்துள்ளது. அதன்பேரில், லத்துவாடி ஊராட்சி அலுவலகத்தை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்வதற்காக கடந்த வாரம், நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ், லத்துவாடிக்கு சென்றுள் ளார். அப்போது ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து ஆவணங்களை தனது அலுவலகத்தில் வைத்துப்பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அங்கி ருந்த ஊராட்சி செயலாளரிடம் எம்பி., இது குறித்து கேட்டபோது, தன்னிடம் ஊராட்சி சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள் ளார்.
இதனால், ஏமாற்றத்துடன் திரும் பிய எம்.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயாசிங்கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு லத்துவாடி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். ஆனால் இதுவரை ஊராட்சி தலைவர் மீது ஆட்சியர் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்த சின்ராஜ், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார். அப்போது, நாமக் கல் பகுதியில், மக்கள் பிரச்சினை நிறைய உள்ளது. அது குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச முடியவில்லை. மக்கள் பிரதிநி திக்கு உரிய மரியாதை தருவ தில்லை. “நான் எம்பியா இல்லையா என எனக்கே தெரியவில்லை” எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்பியிடம் மாவட்ட ஆட்சிய ரிடம் ஸ்ரேயா பி.சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இதையடுத்து அவர் போராட்டத்தை கை விடுத்து கலைந்து சென்றார். இச்சம்பவத் தால் ஆட்சியர் அலுவலக வளாகத் தில் பரபரப்பு ஏற்பட்டது.