districts

img

நாமக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் மாற்றம்

நாமக்கல், மார்ச் 22- நாமக்கல் மக்களவை தொகு தியில் ஏற்கனவே அறிவிக்கப்பட் டிருந்த கொமதேக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விளக்கமளித் துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகு தியில் திமுக கூட்டணியில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்  உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடும் வேட்பாளர் மாதேஸ்வரன் அறிமுகம் செய்யும் கூட்டம், நாமக் கல் மேற்கு மாவட்ட திமுக அலுவ லகத்தில் நடைபெற்றது. திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். இதில் வேட் பாளரை அறிமுகம் செய்து வைத்த கொமதேக பொதுச்செயலா ளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி  லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.  முதல்வர் ஸ்டாலின், கூட்டணியில் உள்ள அனைவரையும் அரவ ணைத்து செல்கிறார். ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் போது, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சுதந்திரம் பெற்ற தாக உணர்வார்கள். பாரதிய ஜனதா கட்சி இந்தியா கூட்ட ணியை பிரித்தாள முயற்சிக்கிறது. ஈடி, ஐடி போன்ற அரசுத்துறை நிறு வனங்களை தங்களது கைப்பாவை களாக பயன்படுத்தி எதிர்க்கட்சி களை முடக்கி விடலாம் என ஒன் றிய அரசு நினைக்கிறது. ஆளு நர் தனது பதவியை விட்டு வெளி யேறி, பாஜகவில் இணைந்து பணி யாற்றினால் அவரை யாரும் எது வும் கேட்கப் போவதில்லை. பதவி யில் இருந்து கொண்டு இவ்வாறு குழப்பத்தை உருவாக்கிக் கொண் டிருப்பதற்கு தான் நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வேட்பாளர் மாற்றம் - விளக்கம் கெஜ்ரிவாலை முடக்கினால் தேர்தல் பணியில் இருந்து அவரை  முடக்கி விடலாம் என பாஜக கைது செய்திருக்கிறது. அதற்கான பலனை தேர்தல் தோல்வி மூலம் உணரப்போகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை ஏற் கனவே அறிவிக்கப்பட்ட சூரி யமூர்த்தி ஈரோட்டை சேர்ந்தவர் என்பதால், நாமக்கல் தொகுதி யில் இருப்பவர்கள் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இங்கு போட்டியிட்டால் அதிகப்படி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனால், நள் ளிரவில் ஆட்சிமன்றக்குழு கூட்டம்  கூடி, சூரியமூர்த்திக்கு பதிலாக  நாமக்கல் தெற்கு மாவட்டச்  செயலாளர் மாதேஸ்வரனை வேட்பாளராக அறிவித்திருக்கி றோம். இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிக்கு அவர் செய்ய உள்ள பணிகள் குறித்து விளக்கமாக கூற உள்ளார், என்றார். இந்நிகழ்வில், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் செல்வகு மார், மதிமுக மாவட்டச் செய லாளர் கே.கே.கணேசன், ஆதித்த மிழர் பேரவை மாவட்டச் செயலா ளர் சரவணன், விசிக மாவட்டச் செய லாளர் முருகன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண் டனர்.