districts

img

சிபிஎம் சேலம் வடக்கு மாநகரச் செயலாளராக என்.பிரவீன்குமார் தேர்வு

சேலம், அக்.20- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம்  வடக்கு மாநகரச் செயலாளராக என்.பிரவீன்குமார் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சேலம் வடக்கு மாநகர 3  ஆவது மாநாடு, புதிய பேருந்து  நிலையம் அருகே தோழர் டி. சேஷகிரி நினைவரங்கத்தில் (பதி ரெஸ்ட் ஹவுஸ்) ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் ஏ.நடராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார். “காதலை போற்றுவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரையாற்றினார். மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.வி.கதிர்வேல் வரவேற்றார். கே.ராமச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி துவக்கவுரையாற்றினார். அறிக்கையை செயலாளர் என்.பிரவீன் குமார் முன்வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.பரமேஸ்வரி வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், சேலம் அரசு மருத்துவ மனை மருத்துவக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாநகரம் முழுவதுமுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய் - சேய் நல மருத்துவம னைகள் 24 மணி நேரமும் செயல் பட, மருத்துவர்களை பணி நிய மனம் செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனமான சேலம்  உருக் காலையை விரிவுபடுத்தி, இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பை  உருவாக்க வேண்டும். சேலம் மாவட்டத்திற்கு  பெருமை சேர்க்கும் வெள்ளித்தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பது, போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது பொய் வழக்கு  போடுவது உள்ளிட்டவைகளை சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையி னர் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செயலாளராக என்.பிர வீன்குமார் மற்றும் 12 மாநகரக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி நிறைவுரையாற்றினார். மாநகரக்குழு உறுப் பினர் பி.முருகானந்தம் நன்றி கூறினார்.