நூறு நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாமக்கல், ஜேடர்பாளையத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் ஜேடர்பாளையம் கிளைத் தலைவர் யுவராஜ், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.சுரேஷ், சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர் .முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.