districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி - குப்பைகள் அகற்றிய நகராட்சி நிர்வாகம்

தாராபுரம், ஜன.22- தாராபுரம் நகராட்சி பகுதிகளில் குவியும் குப்பைகளை பணியாளர்கள் தீ வைப்பது குறித்து தீக்கதிரில் செய்தி வெளி யான நிலையில் குப்பைகள் அகற்றப்பட்டது. தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட அலங்கியம்ரோடு வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் எல்ஜிஜிஎஸ் காலனி,  பீமர்மெயின் வீதி, கீதா நகர், கரூர் மெயின்ரோடு உள்ளிட்ட  பகுதிகளுக்கு சென்று குப்பை சேகரிக்கும் பணி நடை பெறததால் பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் இப்பகுதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.  அதோடு அப்பகுதியில் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுக ளும் கொட்டப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும், நகராட்சி பணியாளர்கள் அந்த குப்பைகளை முறையாக அகற்றாமல் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக் கப்படுவது குறித்து தீக்கதிரில் ஜனவரி 21 அன்று விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தி எதி ரொலியாக தாராபுரம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் பல நாட் களாக அகற்றப்படால் இருந்த குப்பைகளை லாரிகள் மூலம் நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.