உதகை, டிச.29- முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானைகளுக்கு இந்திய கால் நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இரண்டு நாள் உடல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு ரத்தம், சளி, சாணம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானை கள் உள்ளன. இந்த யானைகளுக்கு முதுமலை புலிகள் காப்பக மருத்து வக் குழு சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எடை பரிசோதனை செய் யப்பட்டு யானைகளின் உடல்நிலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், கடந்த டிச.27, 28 ஆகிய இரு நாட்கள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைக ளின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இங்குள்ள யானைகளின் உடல் நிலை மற்றும் அவற்றிற்கான பிரச்சனை குறித்து புலிகள் காப்பக மருத்துவக் குழுவிடம் ஆலோசனை செய்தனர். இதன்பின், யானைகளின் ரத்தம் மற்றும் பிற மருத்துவ மாதிரி களை சேகரித்துள்ளனர். இவை பரி சோதனை செய்யப்பட்டு முடிவுகளை முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத் திற்கு அளிக்கப்படும். இந்த பரிசோத னையின் மூலம் யானைகளின் நோய் கள் மற்றும் அவற்றின் நிலை மதிப்பீடு செய்யப்படும். வழக்கமாக நடை பெறும் நடைமுறைகளில் இதுவும் ஒன்று என வனத்துறையினர் தெரிவித் தனர். இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறு வனத்தின் விஞ்ஞானி மருத்துவர் கரி காலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த ஆய்வுகளை மேற் கொண்டு மாதிரிகளை சேகரித்துள்ள னர். இவற்றின் மாதிரிகள் பரிசோத னைக்கு பின் அதுகுறித்த தகவல்களை புலிகள் காப்பகத்தில் உள்ள மருத் துவ குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அத னடிப்படையில் தேவையான சிகிச்சை முறைகளில் மாற்றம் மேற்கொள்ளப் படும் என கூறப்படுகிறது.