பள்ளிபாளையம், மே 4- பரமத்தி வேலூர் பேரூ ராட்சியில், சேறும், சகதியு மாக குடிநீர் விநியோகத் தால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், பர மத்தி வேலூர் பேரூராட்சி யில் சக்திநகர், காந்திநகர், கந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், புதனன்று காலையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதில், அனைத்து வீடுகளில் இருந்த குழாய்களில் சேறும், சகதியுமான குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரை பொதுமக்கள் தெரி வித்ததையடுத்து, குடிநீர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, கம்பரஸர் மூலம் காற்றை செலுத்தி உள்ளனர். அப்போது குடிநீர் குழாயில் இருந்து சேறும், சகதியுமாக தண்ணீர் வந்துள்ளது. பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா என்பதால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.