தருமபுரி,மார்ச் 4, பட்டா நிலத்தில் யானை தடுப்புக் குழி வெட்டும் நடவடிக்கையை கைவிடக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தரு மபுரி மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத் திற்குபட்டது ஏரிமலை கிராமம். இங்கு இரு ளர் பழங்குடி மக்கள் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றனர். வனத் தையொட்டி உள்ள பட்டா நிலத்தில், இவர் கள் அனைவரும் சிறு, குறு விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் பட்டா நிலத் தில் யானை தடுப்பு குழியை, வனத்துறையி னர் வெட்டி வருகின்றனர். இதனால், விவ சாய பயிர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, பட்டா நிலத்தில் யானை தடுப்புக்குழி வெட் டுவதை கைவிட்டு வனத்தையொட்டிய பகுதி களில் யானை தடுப்புக்குழி வெட்டவேண்டும் எனக் கோரி, தருமபுரி மாவட்ட வன அலுவலரிடம் மனு வழங்கினர். முன்னதாக, தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாரப் பட்டி பகுதிக்குழுச் செயலாளர் ஆர்.சின்ன சாமி மற்றும் மலைவாழ் இருளர் இன மக்கள் என பலர் கலந்து கொண்டு மனு கொடுத்த னர்.