districts

img

கரும்பு பாரம் ஏற்றும் ஓட்டுநர்களின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல், ஆக.10- பள்ளிபாளையம் அருகே கரும்பு பாரம் ஏற்றும் ஓட்டுநர்களின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவ தோடு, விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஓடப்பள்ளி என்ற பகுதி அருகே தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. கட லூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, ஆத் தூர், நாமக்கல் என தமிழ்நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் இந்த ஆலைக்கு கரும் புகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலை யில், தொலைதூரங்களிலிருந்து கரும்பு களை ஆலைக்கு அனுப்பும் விவசாயிகள் வாகன வாடகையை மிச்சப்படுத்துவதற் காக, லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ளவு கரும்பு பாரங்களை ஏற்றி அனுப்பி விடு கின்றனர். சில நேரங்களில் டன் கணக்கிலான கரும்புகள் நடு சாலையில் விழுவதும், அத னால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நி லையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளிபாளையம் வழியாக தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி கள் அதிகளவு வருகின்றனர். அப்போது, பாரம் தாங்காமல் கரும்புகள் சரிவு ஏற்பட் டாலோ, அல்லது வேகத்தடைகளில் வாக னங்கள் ஏறி இறங்கும் பொழுது கரும்பு பாரத்தின் ஒரு பகுதி கீழே கொட்டினா லும் அதை வாகன ஓட்டிகள் பொருட்படுத்தா மல் அப்படியே விட்டு செல்வது தொடர் கதையாகி வருகிறது. சில நேரங்களில் அதிகாலை நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, அவ்வழியாக வரும் வாகனங்கள் சாலை நடுவே கரும்பு பாரம் இருப்பதை அறியாமல் அதன் மேலே வாகனங்களை மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே காவல் துறையினரும், தனியார் சர்க் கரை ஆலை நிர்வாகத்தினரும் இதில் உரிய கவனம் செலுத்தி தொலைதூரங்களிலிருந்து பாரம் ஏற்றி வரும் லாரிகள் அதிகளவு பாரங் களை ஏற்றி வரக்கூடாது. அப்படி வரும் வழி யில் கரும்பு பாரம் கீழே சரிந்தால் அதை முழு மையாக அப்புறப்படுத்தி விட்டு வர வேண் டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள் ளது.