districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆனைமலை ஆற்றை பாதுகாத்திடுக

ஆனைமலை ஆற்றை பாதுகாத்திடுக பொள்ளாச்சி, ஜன.2- ஆனைமலை ஆற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், என விவசாயத் தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்  கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியக் கமிட்டி கூட் டம் வியாழனன்று சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. தாலுகா துணைத்தலைவர் கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், பல லட்சம் மக்கள் வந்து போகும் முக்கிய இடமாக பரிமாணம் அடைந் துள்ள ஆனைமலை நகரம் சுகாதார மேம்பாடு கொண்ட தாக இருக்கும் விதமாக, பாதாள சாக்கடை தேவை அவ சியமாக உள்ளது. துரித நடவடிக்கை எடுத்து விரைந்து அதற்கான வேலைகள் துவக்க வேண்டும். ஆனைமலை  ஆறு நீண்ட நெடிய நாட்களாக மாசுபடுவதைத் எதிர்த்து  பல சந்தர்ப்பங்களில் மக்கள் போராட்டங்கள் நடந்து  வந்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக ஆனை மலை ஆற்றுப்பகுதியிலிருந்து ஆனைமலை மற்றும்  வெளி கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் பாதுகாக்கப் பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீராய் அனுப்பப்பட வேண்டும்.  வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சித்தர் கோயில் அருகே உள்ள உப்பார் தரைப்பாலம் மேம்பாலமாக கட்டித் தரப்பட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.துரைசாமி, பொருளாளர் கே.மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி கோபி, ஜன.2- நம்பியூர் அருகே புதிய உயர் மட்ட பாலம் அமைக் கும் பணியால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் நெடுஞ்சாலை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட புளி யம்பட்டி – நம்பியூர் சாலையில், கொட்டக்காட்டுப் பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்,  போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் வேம் மாண்டம்பாளையம், கொட்டக்காட்டுப்பாளையம், அங் சானூர் மற்றும் குட்டகம் பகுதியைச் சேர்ந்த கிராம  மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே,  உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி யினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் புதிய  உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் வியாழனன்று துவங் கியது. இன்னும் சில மாதங்களில் பணிகள் நிறைவுறும் என்பதால், நம்பியூர் - புளியம்பட்டி சாலையில் மழைக் காலங்களில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து தடை குறைந்து, அவ்வழியாக தடையின்றி பயணத்தை தொடர முடியும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போக்குவரத்துக்கு தகுதியில்லாத கீழ் நிலைப்பாலத்தால் அவதி

தருமபுரி, ஜன.2- பாலக்கோடு அருகே போக்குவ ரத்துக்கு தகுதியில்லாத கீழ் நிலைப் பாலத்தால் மக்கள் அவதியுறும் நிலையில், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந் துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோதுகுலஅள்ளி கிராமத் தில் சுமார் 180 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி  முருக்கம்ம்பட்டி, கோடியூர், கருக்கு மாரனஹள்ளி, வனம்பட்டி, கரகத ஹள்ளி உள்ளிட்ட ஊராட்சிகள் உள் ளன. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமங்களில் வசிக் கும் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால், சோமன அள்ளி வந்து தான் செல்ல வேண் டும். இடையில் ரயில்வே (கிராசிங் எண் 54/C/E/2) கேட் உள்ளது. இதனை அரசு ஆளில்லா கிராஸிங் என்ற நோக்கத்தோடு, கீழ் நிலைப் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், முழுமையாக வேலையை பூர்த்தி அடையாதது, தரமில்லாத சாலை, இரவு நேரத்தில் செல்ல வெளிச்சம் இல்லாத நிலையில் ஆகியவற்றுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட் டது. மேலும், பள்ளி வாகனங்கள், கன ரக பாரம் ஏற்றும் வாகனங்கள் சென்று  வர ஏதுவாக இல்லை. இதனி டையே, மழைக்காலங்களில் தண் ணீர் தேங்கி மக்கள் சென்றுவர முடி யாத பாலமாக அமைந்துவிட்டது. இதனால் கிராமங்களுக்கு பள்ளி,  கல்லூரி பேருந்துகள் வந்து செல்ல  முடியவில்லை. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் கூட  செல்ல முடியாத நிலை உள்ளது.  மேலும், விவசாய விளைப்பொருட் களாகிய கரும்பு, கிழங்கு, தேங்காய் கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் ஏழு  கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மக்க ளுக்கு செலவுகள் அதிகமாகி, வாழ் வாதாரங்களை இழக்க வேண்டி வரும். எனவே, மீண்டும் ரயில்வே கேட்டை திறந்துவிட வேண்டும், அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத் தியுள்ளனர்.

வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல்

ஈரோடு, ஜன.2- ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். ஈரோடு மாநகராட்சி, 44 ஆவது வார்டுக் குட்பட்ட பெரியார் நகர், இ-பிளாக் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பகிர்மான  குழாய் பதித்தல், கண்ணையன் வீதி, பச்சை யப்பா வீதி, பட்டேல் வீதி, அக்ரஹாரம் உள் ளிட்ட பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும்  ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணி களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழ னன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கனிமார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப் பட்ட நிழற்குடையினையும், கள்ளுபிள்ளை யார் கோவில் வீதியில் கட்டப்பட்ட மாநக ராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டி டத்தினையும், ஆர்.கே.வி சாலையில் கட்டப் பட்ட பூங்கா ஆகியவற்றை மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச் சியில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப் பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி யம், மாநகராட்சி ஆணையர் மனிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் செயல்பாடு துவக்கம்

சேலம், ஜன.2- மேட்டூர் காவிரி உபரிநீரை ஏரிக ளுக்கு நிரப்பும் செயல்பாட்டினை, அமைச்சர் ரா.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். மேட்டூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி யுள்ளது. இந்நிலையில், உபரிநீரை ஏரி களுக்கு நீரேற்று மூலம் நிரப்பும் திட் டத்தின் கீழ், சேலம் மாவட்டம், திப்பம் பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப் பட்டு ஏரிகளுக்கு வழங்கும் செயல்பாட் டினை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன் புதனன்று துவக்கி வைத் தார். இதன்பின் அவர் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் மட்டும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியுள்ளது. தற் போது காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏரிகளுக்கு வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை யின் வெள்ள நீரை சேலம் மாவட்டம், சர பங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரி களுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங் கும் திட்டம் ரூ.673.88 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட் டுள்ளது. இத்திட்டத்தில், அணையின்  இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலி ருந்து வெள்ள நீரை திப்பம்பட்டி பிர தான நீரேற்று நிலையம், வெள்ளாள புரம் துணை நீரேற்று நிலையம், கன் னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூல மாக 82 ஏரிகள், குளங்களுக்கு நீர் சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத் தில் சுமார் 70 முதல் 80 சதவிகித ஏரிக ளுக்கு நீர் நிரப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,061.16 ஏக்கர் நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் கார ணமாக மேட்டூர் அணை முழுகொள்ள ளவை எட்டியதால் கடந்த 31.07.2024  முதல் மூன்று நீரேற்று நிலையங்களி லும் உள்ள 27 மின் மோட்டார்கள் மற் றும் பம்புகளுக்கான சோதனை ஓட்டத் தின் மூலம் 40 ஏரிகளுக்கு 267 மில்லியன் கன அடி நீர் நீரேற்றம் செய்யப்பட்டு 2,300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள் ளது. இதன்மூலம் விவசாயப் பயன்பாடு மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி  செய்திட வழிவகை செய்யப்பட்டுள் ளது. மேலும், பெஞ்சல் புயலின் காரண மாக சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிக மழை பெய்து சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக கடந்த 14.12.2024 முதல் 19.12.2024 வரை வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம் மற்றும் கன் னந்தேரி துணை நீரேற்று நிலையம் இயக்கப்பட்டது. இதன் மூலம் 15 ஏரி கள் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து வாத்திப்பட்டி ஏரி, செலவடை ஏரி ஆகிய 2 ஏரிகளுக்கும் நீர் குறைந்துள்ள மற்ற ஏரிகளுக்கும் 100 சதவிகிதம் நீர்நிரப்பும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 25 ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் அமைக்க ரூ.105.35 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  ரா.பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மேட் டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதா சிவம், சார் ஆட்சியர் நே.பொன்மணி, நீர் வளத்துறை சரபங்கா வடிநிலக் கோட்ட  மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் அப்புசாமி, நங்க வள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை, ஜன.2- சித்திரைச்சாவடி அணைக் கட்டில் மூழ்கி ஒருவர் உயிரி ழந்தார். கோவை மாவட்டம், பேரூர் அருகே திருநகர் காலனியைச் சேர்ந்தவர் கதி ரேசன் (40). இவர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது  நண்பருடன் சித்திரைச்சா வடி அணைக்கட்டு பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப் போது அங்கு ஆற்றுக்குள் குதித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘ஒரு நாள் கல்லூரி மாணவி’ நிகழ்வு

சேலம், ஜன.2- கல்லூரி படிப்பை தவற விட்ட பெண்களுக்காக, சேலத்தில் தனியார் கல்லூரி சார்பில் ‘ஒரு நாள் கல்லூரி மாணவி’ நிகழ்வு நடை பெற்றது. சேலம் மாவட்டம், அம் மாபேட்டை பகுதியிலுள்ள சக்தி கைலாஷ் கல்லூரியில், ‘ஒரு நாள் மாணவியின் அனு பவம்’ நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. இந்த நிகழ் வானது தனது கல்லூரி படிப்பை தொடர முடியா மல் பாதியிலேயே, கல்லூரி வாழ்க்கையை கைவிட்ட நபர்களுக்காக நடைபெற் றது. இதில் கல்லூரி வாழ்க் கையை இழந்த 18 வயது  முதல் 60 வயது உடைய பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பங் கேற்ற அனைவரும் ஒன்றாக வகுப்பறையில் அமர்ந்து, பாடங்களை கவனித்தனர். வகுப்பறை கற்றல் அனுப வம், கேண்டினில் அமர்ந்து  உரையாடுதல், நூலகம் படிப்பு திறன் உள்ளிட்ட வற்றை அனுபவித்தனர். தங்களின் வாழ்நாள் கனவு இன்று நிறைவேறியது, என அவர்கள் தெரிவித்தனர்.

ஜன.21, 22 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

திருப்பூர், ஜன.2- திருப்பூர் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி  மாணவ, மாணவிகள், மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.21, 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.  திருப்பூர் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணவவர்களுக்கு ஜன.21 ஆம் தேதியும், கல்லூரிக ளில் பயிலும் மாணவர்களுக்கு ஜன.22 ஆம் தேதி கவிதை,  கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு  மகளிர் கல்லூரிக் கூட்டரங்கில் காலை 10 மணி முதல்  நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ளும்,  பள்ளி மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர் கள் வழியாகவும் அஞ்சலில் அனுப்பலாம். அல்லது  ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜன.16 ஆம்  தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.  ஒவ்வொரு பள்ளி /  கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில்  ஒவ்வொருப் போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாண வர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர் களுக்கு அறிவிக்கப்படும்.    ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம்,  மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் மொத்த பரிசுத் தொகை யாக ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

நியாயவிலை கடைக்கு சுற்றுச்சுவர்:  சட்டமன்ற உறுப்பினரிடம் சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், ஜன.2- மகாலட்சுமி நகர் நியாய விலை கடைக்கு  சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருப் பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வரா ஜிடம் வியாழனன்று மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 42 ஆவது  வார்டுக்கு  உட்பட்ட பகுதிகளில் வியாழனன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, திருப்பூர் மாநக ராட்சி 42 ஆவது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி  நகரின் மேற்கு புறம், கிழக்கு பகுதி, ஜெய் நகர்  கிழக்கு 3 ஆவது வீதி, 12 ஆவது குறுக்கு வீதி,  கிழக்கு விஷ்ணு கார்டன் பிரிவி உள்ளிட்ட பகு திகளில் உள்ள மண் சாலைகளை தார் சாலை யாக மாற்றித் தர வேண்டும். மகாலட்சுமி நகரில்  இயங்கி வரும் நியாய விலை கடைக்கு சுற்றுச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக  விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே  இந்த நியாய விலை கடைக்கு சுற்றுச்சுவர் கட் டித்தர வேண்டும். அதேபோல் பொதுமக்கள்  மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும்  வகையில் கழிப்பிடம், கடைக்கு முன் கூரை அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஜெய்நகர் கிளைச் செய லாளர் சி.சுப்பிரமணியம் வியாழனன்று மனு  அளித்தார். இதில், சி.பழனிசாமி, பி. மாயாண்டி, பி.மாரிமுத்து, திருமேனி, எஸ். சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முறையாக குடிநீர் விநியோகிக்க கோரிக்கை

திருப்பூர், ஜன.2- தோட்டத்துப்பாளையம் பகுதியில் முறை யாக குடி நீர் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி தோட்டத்துப்பா ளையம் பகுதியில் வாரம் இரு முறை விநியோ கிக்கப்பட வேண்டிய குடிநீர் ஒருமுறை விடப் படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போது மான குடிநீர் இன்றி தவிப்பதாக கூறுகின்ற னர்.  இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறுகை யில், தோட்டத்ப்பாளையம் பாகுதியில் 20  நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர்  விடப்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டோம். இதை யடுத்து வாரம் ஒரு முறை தண்ணீர் விநியோகி க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முழு வதும் வாரம் ஒரு முறை 2 மணி நேரம் மட்டுமே  தண்ணீர் விநியோகிக்கபடுகிறது. அதுவும்  இரவு நேரம் விடுவதுதால், சில நேரங்களில் தண்ணீர் வருவதே தெரியாமல் போய்வி டுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என அனைத்து தரபின ரும் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகின்ற னர். அடிப்படை தேவையான தண்ணீரை வாரம் இரு முறை விட மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முடிவுற்ற திட்டப்பணிகள்: அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர், ஜன.2- காங்கேயம் வட்டத்தில், ரூ.72 லட்சம்  மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணி களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட வள்ளியரச்சல் ஊராட்சி, வீரசோழபுரம் ஊராட்சி, இலக் குமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து  கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,  கனிமம் மற்றும் சுரங்கம் நிதி, அயோத்தி தாசர் பண்டிதர் நிதி, மற்றும் பொதுநி தியின் கீழ் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். மேலும், ரூ.59.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத் தார். இந்நிகழ்விற்கு, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ்ராஜா, திருப்பூர் மாந கராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் இல. பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் ரா.மோகனன், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசுப்பள்ளி நுழைவாயிலை சீரமைக்க வலியுறுத்தல்

அரசுப்பள்ளி நுழைவாயிலை சீரமைக்க வலியுறுத்தல் தருமபுரி, ஜன.2- அதியமான்கோட்டை அருகே சிதிலமடைந்த அரசுப் பள்ளி நுழைவாயிலை சீரமைக்க வேண்டும், என பெற் றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே  அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, கோடியூர், ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க் கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற னர். இப்பள்ளியில் நுழைவாயிலானது பல ஆண்டுக ளுக்கு முன்பாக கட்டப்பட்டது. தற்போது சிதல மடைந்து, சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து, கம்பி கள் வெளியில் தெரிகின்றன. ஒரு சில நேரங்களில் பள்ளி  மாணவர்கள் நுழைவாயில் வழியாக உள்ளே செல்லும்  பொழுதும், வெளியில் வரும் பொழுது அவர்கள் மீது  சிமெண்ட் பூச்சுகள் விழுகின்றன. எனவே, நுழைவா யில் மேலும் சிதலமடைந்து பள்ளி மாணவர்களின் மேலே  விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு, சீர மைக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர் கள் வலியுறுத்தியுள்ளனர்.

பட்டியலின மக்கள் மீது முன்னாள் டிஎஸ்பி தாக்குதல்

ஈரோடு, ஜன.2- அந்தியூர் அருகே பட்டியலின மக்களின் வழித்தடத்தை ஆக்கிர மித்து தாக்குதல் நடத்திய முன் னாள் காவல் துறை அதிகாரி மீது  வழக்குப்பதிவு செய்யாமல் காவல்  துறை தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், நகலூர் கிராமம், குண்டு  மூப்பனூர் குடியிருப்பில் பட்டிய லினத்தைச் சேர்ந்த சுமார் 80  குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இக்குடியிருப்பிற்கு ஊராட்சி  நிர்வாகம் சார்பில், மின்கம்பம் நட்டு  தெருவிளக்கு அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பக்கத்து தோட்டத்து உரிமையாளரும், ஓய்வுபெற்ற காவல் துறை துணை  கண்காணிப்பாளருமான முத்து சாமி, மின்கம்பங்களை தனது இடத் தில் பதித்திருப்பதாக சொல்லி ஊராட்சித் தலைவரையும், ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார். மேலும், பொக்லைன் இயந்தி ரத்தை வைத்து அனைத்து மின் கம் பங்களையும் அகற்றியுள்ளார். அதன் பிறகு அவரே வருவாய் துறைக்கு பணம் கட்டி அளவீடு செய்துள்ளார். அதன் பிறகு இரண்டு முறை ஊராட்சி நிர்வா கத்தின் மூலமாக அளவீடு செய்யப் பட்டது. இறுதியாக செவ்வாயன்று மாலை 3 மணியிலிருந்து இரவு 10  மணி வரை நில அளவையர், கிராம  நிர்வாக அலுவலர், நில வருவாய்  ஆய்வாளர் ஆகியோர் அளவீடு செய்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய  ஆணையாளர் அவர்கள் முன் னிலையில் அளவீடு செய்து அத்துக் கற்கள் நடப்பட்டது. ஆனால், புத னன்று முத்துசாமி அடியாட்க ளுடன் வந்து நடப்பட்ட அளவு கற் களை உடைத்துள்ளார். “ஏன் இவ் வாறு செய்கிறீர்கள்” என்று கேட்ட குண்டுமூப்பனூர் பட்டியலின பெண்களை சாதியைச் சொல்லி  இழிவாகப் பேசி, அடித்து கீழே  தள்ளியுள்ளார். இதனால் பாதிக்கப் பட்ட மக்கள் பெருந்துறை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து அந்தியூர் காவல்  நிலையத்தில் புகார் தெரிவிக்கப் பட்டது. ஆனால், பவானி துணை  காவல் கண்காணிப்பாளர் தலை யிட்டு வழக்குப்பதிவு செய்வதை தாமதப்படுத்தி வருவதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், வியா ழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ஆர்.விஜயராக வன், எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா பொருளாளர் டி.ராஜா மற் றும் நல்லூர் ஊராட்சி மன்றத் தலை வர் கண்ணம்மாள் மாதவன் ஆகி யோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திடுக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்டத்  தலைவர் பி.பி.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் மா.அண்ணாதுரை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குண்டுமூப்பனூரில் நடை பெற்ற அராஜகம் குறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரி விக்கப்பட்டது. மேற்படி ஊரிலும், அரசு மருத்துவமனையிலும் பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து புதனன்று இரவு 9 மணி வரை பவானி  துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண் டார். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், எஸ்சி/எஸ்டி  வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல்  அறிக்கை தருவதாக தெரிவித்தார். ஆனால், மறுநாள் இரவு வரை  முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்படவில்லை.எனவே, பட்டிய லின மக்களை தாக்கிய முத்துசாமியை உடனடியாக, வன்கொடுமை  தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

மேட்டுப்பாளையம், ஜன.2- காரமடை அருகே ஒற்றை காட்டு யானை  தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றி யம், நீலாம்பதி கிராமத்தில் பழங்குடியின மக் கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இக்கி ராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்ப டுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (51) என்பவர் வியா ழனன்று காலை விவசாயக் கூலி வேலைக் காக சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு  யானை அவரை துரத்தி, தாக்கியதில் அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகர் சரவணன் தலைமை யிலான வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தையும், அச் சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.