districts

img

குப்பைக்கு தீ வைப்பு - வாகன ஓட்டிகள் அவதி

அவிநாசி, மார்ச் 27- அவிநாசி தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள நீரோடையில் குப் பைகளை கொட்டி தீ வைப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக் குள்ளாகின்றனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கோவை தேசிய நெடுஞ்சாலையி லுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் நீரோடை உள்ளது. இங்கு பல  நாட்களாக நீரோடை பள்ளத்தில் குப்பைகளை கொட்டி, நீரோடை மூடப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் பருவமழை காலகட்டத்தில் சாலை யில் நீர்த்தேக்கம் ஏற்பட வாய்ப்புள் ளது. இதன் காரணமாக சமூக ஆர்வலர் கள், நீரோடையில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தற்பொழுது நீரோடையில் கொட்டுகின்ற குப்பைகளுக்கு தீ  வைப்பதன் மூலமாக, சாலை முழுவ தும் புகை சூழ்ந்து வாகன ஓட்டிக ளுக்கு மூச்சுத்திணறல் எற்பட்டு கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு,  நீரோடையில் குப்பை கொட்டுவதை நிறுத்தம் செய்ய வேண்டுமென சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.