districts

img

வாகன ஓட்டுநர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

சேலம், மார்ச் 17- வாகனத்தை பறிமுதல் செய்த தால், நடுரோட்டில் தீக்குளித்து தற் கொலை செய்து கொண்ட ஓட்டுந ரின் சம்பவம் தொடர்பாக, போக்கு வரத்து காவல் துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், கொண்ட லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (25). சரக்குவேன்  ஓட்டுநரான இவர், கடந்த மார்ச்  12 ஆம் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே தனது சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோத னையில் ஈடுபட்டிருந்த போக்கு வரத்து காவலர்கள், அந்த வாக னத்தை நிறுத்தி அவரிடம் விசா ரணை நடத்தினர். அப்போது சந் தோஷ்குமார் மது போதையில் இருந்ததாக கூறி, அவரது சரக்கு  வாகனத்தை பறிமுதல் செய்யப் டது. மேலும் அவருக்கு ரூ.10 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத னால் மனவேதனை அடைந்த சந்தோஷ்குமார், அப்போதே நடு ரோட்டில் தனது உடலில் பெட் ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில், உடல் கருகி உயிருக்கு போராடிய  அவர் சேலம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டார்.

ஆனால், அங்கு சந்தோஷ் குமார் சிகிச்சை பலனின்றி செவ் வாயன்று இரவு பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து கொண்ட லாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். இதனிடையே, புதனன்று காலை சந்தோஷ்குமாரின் தாயார்  புஷ்பம் மற்றும் அவரது உறவினர் கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு வந்தனர். இதன்பின்,  அவர்கள் சந்தோஷ்குமாரின் உடலை வாங்க மறுத்ததுடன், சந் தோஷ்குமாரின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் கூறு கையில், சந்தோஷ்குமார் கடந்த  10 நாட்களுக்கு முன்பு தான் புதி தாக சரக்கு வேன் வாங்கினார். அந்த வாகனத்தில், கொண்டலாம் பட்டி ரவுண்டானா அருகே சென்ற  போது, அவர் குடிபோதையில் இருந்ததாக கூறி போக்குவரத்து போலீசார், சரக்கு வேனை பறி முதல் செய்தனர். வாகனத்தை கொடுக்கும்படி போலீசாரின் காலில் விழுந்து அவர் கதறி அழு தும் கொடுக்கவில்லை. போலீசா ரின் அலட்சியத்தால் தான் சந் தோஷ்குமார் தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டார். எனவே, போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். குடும் பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர். இதைய டுத்து, மாநகர காவல் துணை ஆணையர் வெங்கடேசன் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில், சந்தோஷ்குமாரின் உடலை பெற்றுக்கொள்ள உறவி னர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல்  பிரேத பரிசோதனை செய்யப் பட்டு, மாலையில் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.