திருப்பூர், ஆக.1- பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் சிஐடியு மோட்டார் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழாவும், சங்கப் பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது. திருப்பூர், பிச்சம்பாளையம் புதூரில் செவ்வாயன்று பிசி ஐடியு திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொபைல் லேபர் யூனியன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா வில் பிச்சம்பாளையம் புதூர் சிஐடியு சங்கப் பெயர் பல கையை மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் சி.அருண், துணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பிச்சம்பாளையம் புதூர் சங்கக் கிளைத் தலைவராக சி.மூர்த்தி, செயலாளராக நாகேஸ்வரன், பொருளாளராக எம். சுரேஷ் ஆகியோரும், கே.கருப்புச்சாமி, எம்.வி.வெள்ளிங் கிரி ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி ஆர்.காளியப்பன், பஞ்சாலை சங்க நிர்வாகி கே.பழனிச்சாமி, அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆ.சிகாமணி, பாண்டியன், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.