உதகை, நவ.24- நீலகிரி மாவட்டத்தில் வடகி ழக்கு பருவமழை இயல்பை விட 35 சதவீதம் கூடுதலாக பெய்துள்ள தாகவும், 68 வீடுகள் சேதம் அடைந் துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித் தார். வடகிழக்கு பருவமழை குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழக மாளிகையில் வியாழனன்று நடைபெற்றது. ஆட்சியர் அருணா முன்னிலையில் நடைபெற்ற கூட் டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி னார். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கடந்த 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை 297 மில்லி மீட்டர் பெய்த நிலை யில், நடப்பாண்டு 402 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டை காட்டிலும் 35 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள் ளன. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள 283 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. மழை பாதிப்புகள் இருந் தால் பொதுமக்கள் அவசர தேவைக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 3500 முதல் நிலை பணியாளர்கள், 200 உதவி பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஜனவரி மாதம் வரை மழை இருக்கும் என்பதால் அதுவரை அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டு உள்ளது. கோத்தகிரி அடுத்த கரிக்கையூர் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட பகுதியில், மாற்றுப்பாதை ஏற்படுத்தி தரப்படும். வடகிழக்கு பருவ மழையால் இதுவரை ஒரு வீடு முழுமையாகவும், 68 வீடு கள் பகுதி அளவும் சேதம் அடைந் துள்ளதாக அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சவுந்தரரா ஜன், மாவட்ட வன அலுவலர் கவு தம் உள்பட பலர் உடனிருந்தனர்.