திருப்பூர், ஜன. 8 - 19ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு ஞாயிறன்று மாவட்டத்தில் 22 இடங்களில் மாணவர் கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் கலை திறமையை வெளிப் படுத்தினர். தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் காங்கயம் ரோடு, வேலன் ஹோட்டல் அருகில் உள்ள மைதா னத்தில் நடத்துகின்றனர். இந்த கண் காட்சியை முன்னிட்டு மாணவ, மாணவி யர்களுக்கான கலை இலக்கிய திற னாய்வு போட்டிகள் ஞாயிறன்று திருப்பூர் மற்றும் நகரங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் நடத்தப்பட்டன.
இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போருக்கு ஒரு பிரி வாகவும், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவி களுக்கு ஒரு பிரிவாகவும் ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் திருப்பூரில் ஜெய் வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கே.எஸ்.சி அரசு மேல் நிலைப்பள்ளி, குமார் நகர் மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளி, பெரிச்சி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, என்.ஆர்.கே புரம் மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி, பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கேயம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் அரசு நடுநிலைப் பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர் பி.வி.கே.என் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்.சி.பி மேல் நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல் நிலைப் பள்ளி, குண்டடம் அரசு மேல் நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக் குளம் அரசு மேல்நிலைப்பள்ளி என திருப்பூர் மாவட்டத்தில் 22 பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் அதிகாலை முதலே ஆர்வத்துடன் மாணவ, மாணவி கள், அவர்களது பெற்றோருடன் வந்து பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அலுவலர்கள், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள் முன்னின்று இந்த போட்டிகளை ஏற்பாடு செய்து நடத் தினர். உடுமலை உடுமலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டி களை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எஸ்.எம். நாகராஜ் துவக்கி வைத்தார். தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் சத்யம் பாபு, நூலக வாசகர் வட்டம் விஜயகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். உடு மலை அரசு கலைக் கல்லூரி வணிக வியல் துறை தலைவர் டாக்டர் மலர் வண்ணன், அரசு ஊழியர் சங்கத்தின் சக்திவேல், நூலக வாசகர் வட்டம் சண்முகசுந்தரம், முன்னாள் தலைமை ஆசிரியர் செல்லத்துரை, நல்லாசிரியர் விருது பெற்ற விஜயலட்சுமி, ஆசிரி யர்கள் மகேந்திரன் மற்றும் ஹேமா ஷெர்லி, பிஎஸ்என்எல் மணி, கல்யாண ராமன், தோழன் ராஜா, ஈஸ்வர சாமி, ஓய்வு பெற்ற நூலகர் கணேசன் ஆகி யோர் கலை இலக்கியப் திறனாய்வு போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இதில் உடுமலை ஒன்றிய பகுதியைச் சேர்ந்த 237 மாணவ மாணவியர் ஓவியம், கவிதை, கட்டுரை போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகத் திரு விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங் கப்படுகின்றன.