districts

img

பருவமழை தீவிரம்: அவலாஞ்சியில் 180 மி.மீ. மழைப்பதிவு

நீலகிரி, ஜூலை 5- அவலாஞ்சியில் ஒரே நாளில் 180 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது இரண்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் வளி மண்டல சுழற்சி  காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக  மாறுபாடு காரணமாகவும்  தமிழகத்தில் நீல கிரி மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 4  நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள் ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் மழை  பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து கமாண்டன்ட் பிரவீன் எஸ்.பிரசாத் தலைமையில், தேசிய  பேரிடர் மீட்பு படையினர் 43 பேர் ஊட்டிக்கு வந்தனர். இதேபோல் மற்ற கோவை ஈரோடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு படையினர் 32 பேர் வந்துள்ளனர். வானிலை ஆய்வு கணிப்பிற்கு மாறாக 3  மற்றும் 4ஆம் தேதிகளில் நீலகிரியில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதற்கு இடையே ஞாயிறயன்று இரவு முதல்  வானம்  கரு மேகங்களுடன் இருட்டி காணப்பட்டது. இதன்படி செவ்வாயன்று நள்ளிரவு முதல் பல் வேறு இடங்களில் கடும் மழை பெய்தது. அவ லாஞ்சியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 180 மில்லி மீட்டர் மழை பெய்தது.  இதனால்  பர்னில் சாலை, குழிச்சோலை  சாலை, சிஎஸ்ஐ பள்ளி பகுதி, தலைக்குந்தா விலிருந்து அத்திகல் செல்லும் சாலை,  ஓவேலி - பாலவாடி சாலை, தேவர்சோலை -  சர்க்கார் மூலை, சேரங்கோடு அடுத்த அய் யன்கொள்ளியில் இருந்து கொளப்பள்ளி செல் லும் சாலை, நெல்லியாலம் அடுத்த சேலக் குன்னு ஆகிய 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர். கனத்த மழையின் காரணமாக பந்தலுரை சேர்ந்த கிருஷ்ணன், குன்னூரை சேர்ந்த கண்ணம்மாள் ஆகியோரின் வீடு கள் சேதம் அடைந்தன.  இதேபோல் ஓவேலியில் இருந்து ஆத் தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத் தில் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த  சதாசிவம் என்பவர் மீது மரக்கிளை முறிந்து  விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.  மேலும் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள் ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஊட்டியில் புதனன்று 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற் றில் ஈரப்பதத்தின் அளவு 89 சதவிதமாக இருந் தது.