ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.40 கோடி பணமோசடி
உதகை, நவ.28- குன்னூர் வெலிங்டன் பகுதியில் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி, மோசடி செய்த தம்பதி யினரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி, நீலகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம், கேத்தி அருகே உள்ள மொக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி தனலட் சுமி. இவர்கள் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் கடை வாட கைக்கு எடுத்து, அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஏலச்சீட்டில் சேரு மாறும், அதிக லாபம் ஈட்டி கொடுப்பதாகவும் உறுதி யளித்துள்ளனர். இதன்படி ரூ.50 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் தொகை மதிப்பில் ஏலச்சீட்டு நடத்தி வந் துள்ளனர். இதை நம்பிய அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், இந்த தம்பதியிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் தவணைத் தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கம் போல் ஏலச்சீட்டில் கலந்து கொள்வதற்காகவும், மாதத்தவணை தொகை செலுத்து வதற்காகவும் சீட்டு நடத்தி வந்த கடைக்கு சென்றபோது கடை மற்றும் வீடு ஆகியவை பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அரு கிலுள்ள நபர்களிடம் விசாரித்ததில் உடல்நிலை சரியில் லாத காரணமாக கூறி தனலட்சுமி மற்றும் குமார் குடும்பத் துடன் ஜூலை 23 ஆம் தேதி தனது மகன் வீட்டுக்கு சென்றதாக கூறியுள்ளனர். இதனால் ஏலச்சீட்டு பணத்தை திருப்பித் தருமாறு தனலட்சுமி மற்றும் குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு போது அழைப்பை ஏற்கவில்லை. இத னால் சிலர் கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் வசித்து வந்த தனலட்சுமி, குமார் தம்பதியினரிடம் பணத்தைப்பெற நேரில் சென்றுள்ளனர். அப்போது பணத்தை திருப்பி தருவ தாக கூறி தம்பதியினர் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தைத் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த நபர்கள் வெலிங்டன் காவல் நிலையத்தில் குமார், தனலட்சுமி மீது புகார் அளித்தனர். இதுகு றித்த விசாரணையில், சீட்டு தொகையை 2 மாதத்துக்குள் தரு வதாக தனலட்சுமி பிரமாண பத்திரம் மூலம் உறுதியளித் துள்ளார். ஆனால், 2 மாதங்களாகியும் பணத்தை திருப்பி தரவில் லை. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்களன்று புகார் அளித்தனர்.
வாளியில் விழுந்து குழந்தை பலி
உதகை, நவ.28- உதகையில் 1½ வயது குழந்தை வாளி தண்ணீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை பிங்கர்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற சலீம் (32). இவருடைய மனைவி பிரி ஜோத் பானு (28). இவர்களுக்கு 8 வயது மற்றும் 1½ வயதில் ரோஜா என்ற 2 குழந்தைகள் உள்ளன. ஞாயிறன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் 2 குழந்தைகளும் வீட்டு வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 2 ஆவது குழந்தையை நீண்ட நேரமாக காணவில்லை. தேடிப்பார்த்த போது, வீட்டின் குளியல் அறையில் உள்ள வாளி தண்ணீரில் தலைகீழாக மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. வாளி தண்ணீரில் குழந்தை மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஎம் காலை நேர தொடர் வகுப்பு திருப்பூரில் நாளை தொடக்கம்
சிபிஎம் காலை நேர தொடர் வகுப்பு திருப்பூரில் நாளை தொடக்கம் திருப்பூர், நவ. 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு ஆண்டுதோறும் நடத்தக்கூடிய பத்து நாள் காலை நேர தொடர் வகுப்பு புதன்கிழமை தொடங்குகிறது. திருப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதிகாலை தொடர் வகுப்புகள் பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு வரை நடை பெற்ற இந்த பத்து நாள் தொடர் வகுப்பு இந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தொடங்கப்படுகிறது. திருப்பூர் அவிநாசி சாலை தியாகி பழனிசாமி நிலையத் தில் காலை சரியாக 6.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெறும் வகுப்பு 7.30 மணிக்கு நிறைவடையும். இந்த ஆண்டு “அரசியல் சாசன விழுமியங்களும், கம்யூ னிஸ்டுகள் பங்களிப்பும்” என்ற தலைப்பில் இந்த தொடர் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டம், அரசியல் சாசனம் உருவான வரலாறு, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களாகத் திகழும் மதச்சார்பின்மை, ஜனநா யகம், பாலின சமத்துவம் - சமூக நீதி, கூட்டாட்சி மற்றும் நீதித்து றையின் செயல்பாடு உள்ளிட்டவற்றின் வரலாறு, கம்யூனிஸ் டுகளின் பங்களிப்பு, இன்றைய பாரதிய ஜனதா ஆட்சிக் காலத் தில் அரசியல் சாசனத்தை சிதைப்பதற்கு, குறி வைத்து தாக்கக் கூடிய நிலை, மக்களுக்கான மாடல்கள், சோசலிச நாடுகளின் அரசியல் சாசனங்கள் என விரிவான முறையில் புரிந்து கொள் ளக்கூடிய வகையில் இந்த வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த பொருள் குறித்து தேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளனர். முதல் நாளான புதன்கிழமை விடு தலைப் போரில் கம்யூனிஸ்டுகள் குறித்து மதுரை வேலாயுதம் உரையாற்றுகிறார். பத்து நாள் தொடர் வகுப்பின் நிறைவாக டிசம்பர் 9ஆம் தேதி காலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, தமிழக வளர்ச்சி யில் கம்யூனிஸ்டுகள் பங்கு என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். இன்றைய சவாலான கால கட்டத்தில் அரசியல் சாசனத் தையும், அரசியல் சூழ்நிலையையும் புரிந்து கொண்டு செயல் படுவதற்கு ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து தரப்பின ரும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்களும் பங்கேற்று இந்த இலவச வகுப்பில் பங்கேற்று பயனடையு மாறு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியிருக்கிறார்.
நவ.29 ஆம் தேதி முதல் உடுமலைப்பேட்டையில் கலைத் திருவிழா
உடுமலை, நவ.28- திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டார அளவி லான கலைத் திருவிழா போட்டிகள் 29 ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் உடுமலை தளிரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவி ழாவில் 34 வகையான கலை, இலக்கிய, நடனம், பேச்சு உள் ளிட்ட போட்டிகள் இன்று முதல் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு ஒரு பிரிவாகவும், 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடக்கவுள்ளது. இந்த விழாவிற்கான ஆலோச னைக் கூட்டம் வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆறுமுகம், மனோகரன் மற்றும் சிவசக்தி காலனி அரசு உயர்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் போட்டிகள் எவ்வாறு நடத்தப்பட வேண் டும் என்று தேர்வு செய்யப்பட்ட நடுவர் குழுவினருக்கு ஆலோ சனைகள் வழங்கினார். 30க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக் கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
வன்கொடுமை வழக்கில் காவலர் கைது
அவிநாசி, நவ.28– அவிநாசியில் திருமணமானதை மறைத்து வேறொரு பெண்ணை காத லித்து சாதியின் பெயரைச் சொல்லி திட்டிய காவலர் வன்கொடுமை வழக் கில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வர் அருள் குமார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் காவல ராக பணி பணிபுரிந்து வரும் இவர், அவி நாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் குமரல் காலனி பகுதியில் வசித்து வரு கிறார். இவரது வீட்டிற்கு எதிரில் குமார், அவரது மனைவி மருதாள் மற்றும் மகள் சந்தியா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சந்தியா அவிநாசிலிங்கம்பாளை யம் பகுதியில் உள்ள ஸ்டீல் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலை யில், அருள்குமார் சந்தியாவிடம் ஏற்க னவே தனக்கு திருமணமாகி 2 குழந்தை கள் உள்ளதை மறைத்து பேசி பழகி வந்துள்ளார். இதை கண்டித்த சந்தியா வின் பெற்றோரை ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், சந்தியாவை வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்றும், மீறி திருமணம் செய்தால் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். அருள்குமார் ஒரு காவலர் என்ப தால் அவர் மீது புகார் கொடுக்க சந்தியா வின் பெற்றோர்கள் பயந்து வந்துள்ள னர். இந்நிலையில், சனிக்கிழமை வழக் கம்போல வேலைக்கு சென்ற சந்தியா, விசம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து அவிநாசி அருகே அணைப் புதூரில் உள்ள தனியார் மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் தெரிந்து அவரின் பெற்றோர் சென்று பார்த்துவிட்டு, சந்தியா வேலை செய்த கடையில் விசாரித்தபோது, காலை 11 மணியளவில் சந்தியாவை பார்க்க ஸ்டீல் கடைக்கு வந்த அருள் குமார், அவருடன் சண்டை போட்டு கன் னத்தில் அடித்தது தெரிய வந்தது. இதை யடுத்து சந்தியாவின் தாயார் மருதாள் நடந்த அனைத்து விவரங்களுடன் தனது மகளை தற்கொலைக்கு காவலர் அருள் குமார் தூண்டியதாக அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி, காவலர் அருள்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரி வின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
சாமளாபுரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர், நவ. 28 - பல்லடம் வட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் நகரங்களின் தூய்மைக் கான மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இணைய கோளாறை சீரமைக்க கோரிக்கை
அவிநாசி. நவ.28– அவிநாசி மின்சார வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகம் அவிநாசி, மங் கலம் சாலையில் உள்ளது. தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண் டும் என்ற உத்தரவையடுத்து அதிகமானவர்கள் வருகி றார்கள். இணையதளம் கோளாறு காரணமாக மின் கட்டணம் செலுத்த இயலா மலும், ஆதார் எண்ணை இணைக்க இயலாமலும் மக் கள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். ஆகவே இணைய தள சேவையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க பிஏபி பாசன விவசாயிகள் கோரிக்கை
கோவை, நவ.28- சேதமடைந்த பாசன கால்வாய்களை சீரமைக்க விவசாயி கள் கோரிக்கை விடுத்த நிலையில், ரூ.1,100 கோடி மதிப்பீட் டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப் பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை யிலிருந்து பிஏபி பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், கடைமடை வரை தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்தும், பெயரளவிற்கு மட்டும் சீரமைக் கப்படுகிறது. மேலும், பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க் கார்பதி வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் காண்டூர் கால்வாயும் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதே நிலைமையில் தான் ஆழியாறு அணை மூலம் பாசனம் பெறும் புதிய மற்றும் பழைய ஆயக் கட்டு பாசன கால்வாய்களும் உள்ளன. எனவே கால்வாயை தூர்வாரி சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண் டும் என்று பிஏபி பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ள னர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகை யில், ஆண்டுதோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் வழக்கம் போல் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதைத்தவிர மெயின் கால்வாய், பிரதான கால்வாய், கிளை கால்வாய், பகிர்மான கால்வாய்கள் அனைத்தும் உலக வங்கி நிதி உதவியுடன் 1997 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரைக்கும் முதற்கட்டமாக அதிகமாக சேதமடைந்த பகுதிகள் கான்கீரிட் அமைத்து சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு விடு பட்ட சேதமடைந்த பகுதிகள் 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மீண்டும் சீரமைக்கப்பட்டது. முதற்கட்டமாக கால்வாய்கள் சீரமைத்து 25 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது. இதனால் பிரதான கால்வாய், கிளை கால்வாய், பகிர்மான கால்வாய்கள் அனைத்தும் நிறைய இடங்களில் மோசமாக சேதமடைந்துள்ளது. கால்வாயில் ஆண்டிற்கு இரு போகத் திற்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. ஆண்டிற்கு 10 மாதங்கள் தண்ணீர் செல்வதாலும், நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் கால்வாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பாதிப்புள்ளது. கால்வாய்களை சீரமைக்க தற் போது நிதி இல்லை. இதனால் கால்வாய்களை முழுமையாக சீரமைக்க சுமார் ரூ.1,100 கோடிக்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. எந்த ஒப்பந்ததாரர் பணி களை எடுக்கிறாரோ, அவர் காண்டூர் கால்வாய் முதல் அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க விரிவாக திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள் ளது. அதாவது உலக வங்கி, ஒன்றிய அரசின் நிதி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி இதுபோன்ற நிதிகளை பெற்று முழுமை யாக சீரமைக்கப்பட உள்ளது. அந்த நிதி வந்ததும் கால்வாய் கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது டெண்டர் இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது, என்றார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
உதகை, நவ.28- கூடலூர் அரசு பள்ளியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட் டில், 172 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாடு, கூடலூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு அறிவியல் இயக்க மாவட்ட செயலா ளர் சங்கர் தலைமை வகித்தார். கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், கூடலூர் அரசு கல்லூரி முதல் வர் ராஜேந்திரன், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன், அறி வியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இம்மாநாட்டில் 42 பள்ளிக்களைச் சேர்ந்த மாணவர்கள் 344 பேர் கலந்து கொண்டு, 172 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் 20 கட்டுரைகள் மாநில அளவிலான மாநாட் டில் சமர்ப்பிப்பதற்காக தேர்வு செய்யப்பட் டது. இதன்பின் மாநில அளவிலான மாநாட் டுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கலந்து கொண்ட மாணவர்க ளுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் முகமது பாஷா பரிசு மற்றும் பதக் கங்களை வழங்கினார்.
அடிப்படை வசதி கேட்டு தலித் மக்கள் ஆட்சியரிடம் மனு
தருமபுரி, நவ.28- அடிப்படை வசதி கேட்டு பட்டகப்பட்டி தலித் மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், கெட்டியான அள்ளி ஊராட்சிக்குட்பட்டது.பட்டகப்பட்டி ஆதிதர்விடர் காலனி, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் இம்மக்களுக்கு சொந்த விவசாய நிலம் இல்லை. தினக்கூலிகளாக வேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 1990 ஆம் ஆண் டில் அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள் ளது. அந்த சேதமடைந்த வீட்டிலேயே ஒரு வீட்டில் இரண்டு, மூன்று, குடும்பங்களாக வாழ்ந்துவருகின்றனர். இங்கு பொது கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபா தைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மேலும், கிரா மத்திற்கு சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களை ஆற்றோரம் அடக்கம் செய்யும் அவலம் நீடிக்கிறது. எனவே சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி, சுடுகாட்டுடன் பாதை அமைத்து தரவேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இல வச மனைபட்டா வழங்கி, அந்த இடத்தில் அரசு வீடு கட்டித் தர வேண்டும். வீட்டிற்கு ஒரு கழிப்பறை வசதி, பொது சுகா தார வளாகம் அமைத்து தரவேண்டும் என மனுவில் வலியு றுத்தி உள்ளனர்.