ஈரோடு, ஏப். 5- அரசு பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்த்த ஒன்றிய மோடி அரசு, 40 முறை தமிழ்நாட்டிற்கு மோடி வந்தாலும் 40 தொகுதி களிலும் பாஜக டெபாசிட் இழக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தெரிவித் தார். ஈரோடு சுல்தான் பேட்டை பள்ளிவாசல் பகுதியில் இஸ்லாமிய பெருமக்களிடம் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷிற்கு ஆதரவு கோரி அப்துல் சமது வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர், இன்னும் நான்கு முறை மட்டுமல்ல, 40 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகு திகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும். கடந்த பத்து ஆண்டுகால பாஜகவின் மோடி அரசு, அரசு துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தியது. இதன் கார ணமாக பாஜகவிற்கு எதிரான அலை இந்தியா முழுவதும் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார். இதில் மாவட்ட தலைவர் சித்திக், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பா ளர் ரிஸ்வான், மமக மாவட்டச் செயலாளர் சலீம், தமுமுக மாவட்டச் செயலாளர் முகமது லரீப், மாவட்டப் பொருளாளர் சகுபர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.