கோவை, மார்ச் 2- மாநகராட்சி பகுதிகளில் அங் கன்வாடி மையம் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய மோடி அரசுக்கு காலம் தக்க பாடத்தை கற்பிக்கும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சித்தார். கோவை மாவட்டம், உருமாண் டபாளையத்தில் குழந்தைகள் நல மைய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மிக வும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த கட்டிடத்தை எம்.நல்ல சாமி ஐயா நினைவாக, அவரது குடும்பத்தினர் சொந்த நிதியின் மூலம், கோவை மாநகராட்சி 14 ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் முயற்சியில் மேற்கூரை அமைத்து, அங்கன்வாடி மையம் சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிவ டைந்த நிலையில், பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று பெயர் பல கையை திறந்து வைத்து உரை யாற்றினார். அப்போது பி.ஆர்.நடராஜன் எம்பி., கூறுகையில், மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையில், அங்கன்வாடி, ரேசன் கடைகள் கட்டுவதற்கு மாநில அரசு 60 சதவிகித நிதியையும், ஒன் றிய அரசு 40 சதவிகித நிதியையும் ஒதுக்கீடு செய்வார்கள். அதனடிப் படையிலேயே ஏரளாமான அங்கன் வாடி கட்டடங்கள் கட்டப்பட்டது. ஆனால், மோடி அரசு வந்ததற்கு பிறகு மாநகராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள் கட்டுவ தற்கான நிதியை ஒதுக்கீடு செய் வதை முற்றிலுமாக நிறுத்திவிட் டது. இந்த அங்கன்வாடி மையங் களில் நமது பகுதியில் உள்ள எளிய மக்களின் குழந்தைகளை பராம ரிக்கப்படுகிறது. இந்த அங்கன் வாடி மையத்திற்குகூட நிதியை ஒதுக்க முடியாது என்கிற நிலைப் பாட்டில் உள்ள அரசுதான் ஒன்றியத் தில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு. இதனையடுத்துதான் தமிழக முதல்வர்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ரேசன் கடைகள் அமைப் பதற்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியை கூடுதலாக ஒதுக்க வேண் டும் என்று கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில்தான் கோவை யில் என்னுடைய தொகுதியில் மட் டும் 20க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், ரேசன் கடைகள் கட்டு வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, கட்ட டங்கள் கட்டப்பட்டு தற்போது பயன் பாட்டிற்கு வந்துள்ளது. இதேபோன்று, தங்கள் பகுதி யில் உள்ள அங்கன்வாடி மையங் களை பராமரிக்க, புதுப்பிக்க அந் தந்த பகுதியில் உள்ள வசதி படைத் தவர்கள் மற்றும் மனது உள்ளவர் கள் சொந்த நிதியை பயன்படுத்த லாம் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில்தான் இந்த அங்கன் வாடி மையத்தை புதுப்பிக்க நல்ல சாமி குடும்பத்தினர் தங்களது சொந்த நிதியை கொடுத்துள்ளனர். இத னையறியாத சிலர், எந்த நல்ல திட் டங்களையும் எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடனே அலைப வர்கள் உரும்மாண்டம்பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு எதி ராக செயல்பட்டிருக்கின்றனர். எளிய மக்களின் குழந்தைகளை பராம ரிக்கும் அங்கன்வாடி மையத்தில் கூட அரசியல் செய்யும் இத்தகைய நபர்கள் மக்கள் அம்பலப்பட்டுப் போவர்கள், என்றார். இந்நிகழ்வில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளா ளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செய லாளர் சி.சிவவாமி, இந்திய தேசிய காங்கிரஸ் கே.மௌனசாமி, மதி முக உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன் குமார், சிபிஎம் மாமன்றக்குழு தலைவர் வி.இராம முர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் 13 வார்டு சுமதி நாகராஜ், 2 ஆவது வார்டு புஷ்பமணி அருள் குமார், 15 ஆவது வார்டு சாந்தா மணி பச்சைமுத்து, 1 ஆவது வார்டு கற்பகம் ராஜசேகர் மற்றும் ஏ.நல்ல சாமி குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், ஊர் பொது மக்கள் திரளானோர் பங் கேற்றனர்.