districts

img

கிளை மேலாளர் செய்ய வேண்டியதை ஒன்றிய நிதியமைச்சர் செய்கிறார்

மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனையாக மதுரை எய்ம்ஸில் நட்டு வைக்கப்பட்ட ஒற்றை செங்கல் சாட்சியாய் திகழ்கிறது. மக்களுக்கான திட்டங்கள் எதை யும் செய்யாமலேயே, விளம்பரத்தின் மூலமே ஆட்சி நடத்த முடியும் என்கிற புதிய நடை முறையை ஒன்றிய மோடி அரசு நிருபித்துக் காட்டி உள்ளது. இனி மீதம் இருக்கிற ஓராண்டு காலமும், அப்படித்தான் செல்லும் என்பதற்கு உதராணமாக, ஸ்டேசன் மாஸ்டர் துவக்கி வைக்க வேண்டிய ரயில்களை, கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்து, பிரதமரே துவக்கி வைப்பதும், வங்கியின் கிளை மேலாளர் முன் னின்று நடத்த வேண்டிய கடன் வழங்கும் முகா மிற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து  நிதியமைச்சரே நேரில் வந்து துவக்கிவைக்கும் கேலிக்கூத்துகள் அரங்கேறி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தின் மாண்பினை கேலி செய்யும் வகையில், மோடியின் பிம்பத்தை ஊதிப்பெருக்கி காட்ட அரசின் கஜானா தாரா ளமாக திறந்துவிடப்பட்டுள்ளது.

மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்த விளம்பரத் தில் மோடியின் உருவப்படம் வருவது காண முடிகிறது. இதன் மூலம் தான்தான் சர்வ அதி காரம் படைத்தவர் என்ற அதிகாரத்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது. ஏதேனும் உருப் படாத திட்டத்தை செயல்படுத்தினால்கூட, அதற்கு அதிகளவில் விளம்பரம் தேடிக் கொள்ள மக்களின் வரிப்பணத்தைச் செல விட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் ரூ.7000 கோடி வரை செலவிட்டுள்ளதாக புள்ளி விவ ரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் படத்துடனும், வளர்ச்சி என்ற பெயரில் வெளி யிடப்பட்ட அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் தேர்தல்களை முன்னிறுத்தியே உருவாக்கப் பட்டுள்ளன. ஒன்றிய அரசு விளம்பரங்களுக் காக செலவு செய்த தொகையில் சுமார் 10  கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி யிருக்க முடியும். 4 ஐஐடி கல்வி நிறுவனங்க ளைக் கட்டியிருக்க முடியும். 5 நகரங்களில் சிறப்பான மருத்துவ வசதி கொண்ட எய்ம்ஸ்  மருத்துவமனைகள் கட்டியிருக்க முடியும் என் கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

 

7 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை விளம் பரங்களுக்காகச் செலவு செய்த இதே ஒன்றிய அரசு. மனிதக் கழிவுகளை அள்ளுபவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக சில கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. வெகுஜன மக்களுக்கான திட்டங்கள் என சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு திட் டத்தையும் நிறைவேற்றாத ஒன்றிய பாஜக அரசு, வழக்கமான அரசு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை தான் சாதனை என கூப்பாடு போட்டு மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் தேடி வருகிறது. அதிக கட்டணத்து டன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நேரில் வந்து துவக்கி வைப்பது, அதற்கான ஏற்பாடுகள் மற் றும் விளம்பரங்களுக்கு பல கோடி ரூபாய் மக் கள் பணத்தை வாரி இறைத்தது வருகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு புதி தாக வந்தே பாரத் ரயில் சேவை துவக்கப் பட்டுள்ள நிலையில், பிற ரயில்களின் பயண நேரத்தை அதிகரித்துள்ளது தனிக்கதை. இதென்ன பிரமாதம், இதைவிட ஸ்பெஷல்  ஐட்டம் ஒன்று உள்ளது என்ற நடிகர் வடி வேலின் திரைப்பட வசனத்தை நினைவுபடுத் தும் விதமாக வங்கிகள் கடன் வழங்கும் முகாமை துவக்கி வைக்க ஒன்றிய நிதியமைச் சர் விமானம் பிடித்து தில்லியில் இருந்து கோவைக்கு வந்தது தான் வேடிக்கை. கடன் வழங்கும் முகாம்களை வழக்கமாக வங்கி மேலாளர்களே துவக்கி வைப்பதுதான் வழக் கம்.  இதில் ஒன்றிய அமைச்சர் நேரில் வந்து பங்கேற்று விளம்பரம் தேட வேண்டுமா என நிகழ்ச்சிக்கு வந்த பயனாளிகளே நகைப்பு டன் முணுமுணுத்துச் சென்றனர்.  

நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்கி  வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளதால் அச்சத்தில் ஒன்றிய மோடி அரசு இருக்கிறது. ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இதனை மடை மாற்ற வகுப்புவாத நடவடிக் கையை முன்னெடுக்கிறது. மறுபுறம், எப்படி யாவது தேர்தலில் வென்று விட வேண்டும் என விளம்பர மோகத்தில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து வருகிறது.  வெளியிடப்பட்ட வெற்று விளம்பரங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்குப் பெரும் தலை வலியை ஏற்படுத்தியுள்ளது. இதன்தொடர்ச்சிதான கோவையில், ஒன் றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாபெரும் கடன் வழங்கும் நிகழ்வில், கடன் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்க வில்லை என கூறி தொழிலதிபர் ஒருவர் முழக்க மிட்டு வெளியேறிய நிகழ்வு நடைபெற்றது. கடன் வழங்கும் நிகழ்வில், சதீஷ் என்கிற தொழில் அதிபர், செய்தியாளர்களிடம் கூறு கையில், கொரேனா ஊரடங்கு பின் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, வங்கி யில் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், கடனும் வழங்க வில்லை, முறையான பதிலும் வங்கி தெரிவிக்கவில்லை. இதுகுறித்து, பிரத மர் அலுவலகத்திற்க கடிதம் அனுப்பினேன்.  ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. இந்த  மாதம் விண்ணப்பம் கொடுத்தார். அடுத்த  மாதம் லோன் கிடைக்கும் என நிதியமைச்சர்  பேசுகிறார். இரண்டு வருடமாய் லோனுக்கு  லோலோ என அலைகிறேன். எதுவும் கிடைக்க வில்லை. எல்லாம் நாடகம்தான் ஆதங்கத் தோடு வெளியேறிய நிகழ்வு கோவையில் நடைபெற்றது.

-கார்த்திக்