சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடித்த மோடி அரசு.
இல்லத்தரசிகள் குமுறல். சேலம்,ஜீலை07- சிலிண்டர் விலை உயர்வை ரூ 50 ஆக உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளனர் என சேலத்தில் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்,
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மோடி அரசு மேலும் 50 ரூபாய் உயர்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை 6 முதல் 1068 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 12 மாதங் களில் மட்டும் வீட்டு உபயோக சமை யல் எரிவாயு விலையை, மோடி அரசு சிலிண்டர் ஒன்றுக்கு 253 ரூபாய் உயர்த்தியுள்ளனர். இதற்கு சேலத்தில் இத்த த்தரிசிகளும் பொதுமக்களும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
திருமதி.ஞானசௌந்தரி, ஜனநாயக மாதர் சங்க செயலாளர்.
ஒன்றிய மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனம் தான் சிலிண்டர் விலை் உயர்வு செய்கிறது. இதற்கு மத்திய அரசு தான் காரடம். ஆணால் மோடி அரசுக்கும் எண்ணெய் நிறுவனத்திற்கும் சம்மந்தமில்லை என கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் எனவும், அரசு நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கடந்த 17 மாதங்களில் 368 ரூபாயும், கடந்த ஓராண்டில் 253 ரூபாயும், 4 மாதங்களுக்குள் மட்டும் 103 ரூபாய் காசுகளும் சிலிண்டர் விலை யை மோடி அரசு உயர்த்தியுள்ளது. இது இந்திய ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் பலத்த அடியாக அமைந்துள்ளது எனவும் உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.
மலர்கொடி, அம்மாபாளையம்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டுவந்த நாங்கள் படிப்படியாக கடந்த சில வருடங்களாகதான் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்திவந்தோம். வாங்கும்போது விலை குறைவாக இருந்தது. சரி வீட்டில் இனி புகையில் கஷ்டப்பட தேவையில்லை என நினைத்து சந்தோசமாக இருந்தோம். ஆனால் மோடி அரசின் சிலிண்டர் விலை உயர்வால் தற்போது உணவை சமைக்க மூடியாமல் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்தது போல் கொடுத்துவிட்டு தற்போது சிலிண்டரை வாங்க முடியாத அளவிற்கு விலையை உயர்த்திவிட்டனர் எனவும் உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
சங்கீதா, கன்னங்குறிச்சி.
தினக்கூலியை நம்பி தான் எங்கள் குடும்பம் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. என் கணவரின் குறைவான கூலியை வைத்துதான் உணவு, குழந்தைகளின் கல்வி, கடன் பிரச்சனைகளை சரிசெய்து வருகிறோம். ஓரளவிற்கு சமாளித்துவரும் சூழலில் ஒன்றிய அரசின் சமையல் விலை ஏற்றம் பெரிய துயரத்தை கொடுத்துள்ளது. தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் சிரம பட்டுவரும் நிலையில் சிலிண்டர் விலை உயர்வு எங்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது என தெரிவித்தார்.
செல்வி, சேலம் தாலுகா.
ஏழை எளிய மக்கள் தங்களின் குடும்ப செலவு, பள்ளிகட்டணம், மருத்து செலவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மோடி அரசு உயரத்தி வருவது கண்டனத்திற்குறியது எனவும், பெரும் முதலாளிகளுக்கும், கார்பரேட் நிறுவனத்திற்கும் வழங்கப்படும் வரிச்சலுகைகளை ரத்து செய்து, ஏழை மக்கள் பயன்படுத்தும் சிலிண்டரின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும், 2 ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாகவே மோடி அரசு இல்லாமல் செய்து விட்டது அதை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தனசுதா, ஆட்டையாம்பட்டி.
சிலிண்டர் விலையும் ஏற்றிவிட்டனர், மாத மாதம் வழங்கி வந்த சிலிண்டர் மாணியமும் தற்போது வரவில்லை. ஓட்டு கேட்டுவரும்போது திமுக கட்சியினர் சிலிண்டருக்கு ரூ100 மானியம் தருவோம் என கூறினார்கள், மோடி கட்சியினர் ஏதோ திட்டத்தில் எங்களுக்கு இலவசமாக சிலிண்டரை கொடுத்துவிட்டு தற்போது மாதம் மாதம் விலையை ஏற்றிவருகின்றனர். எங்களுக்கு சிலிண்டர் பயன்படுத்த விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
காயத்திரி,பெரியகொல்லப்பட்டி.
மோடி அரசு முடிவதற்குள் நாட்டில் எல்லாம் இறந்துவிடுவார்கள் என நினைக்கிறேன். பால், தயிர், எண்ணெய், மளிகை பொருட்கள், ஆடைகள் என அனைத்திற்கும் புதிது புதிதாக ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியை போட்டுவருகிறார். தற்போது தனக்கு சம்மந்தமில்லாதது போல் எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையை நிர்னயம் செய்கிறது என மக்களிடம் பொய்யாக நடிக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களின் வாழ்வாதாரம் பின்னோக்கிதான் சென்றுள்ளது. இப்படி திடீரென சிலிண்டர் விலையை உயர்த்தினால் மூன்று வேலை சமைக்க முடியாத நிலை ஏற்படும். பன்டைய காலம் போல ஒருவேலை சமைத்து பழைய சோறு சாப்பிட வேண்டிய நிலைக்கு விரைவில் வருவோம் என நினைக்கிறேன். எங்களின் ஆண்டு வருமானம் மோடி ஆட்சியில் பாதியாக குறைந்துவிட்டது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. எப்படி ஏழை எழிய மக்கள் குடும்பம் தடத்திட முடியும். நாட்டை அழிவு பாதைக்கு மோடி அரசு கொண்டு செல்கிறது. மோடி அரசின் திட்டங்கள் மக்களுக்கு சுமையை ஏற்படுத்திவருகிறது. மாடுகளுக்கு அறிவிக்கும் திட்டங்களை மோடி மனிதர்களின் நல்ல வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அறிவிக்க வேண்டும் எனவும், உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என தெரவித்தார்.
சேலம்,எழில்