தருமபுரி, நவ.6- கிராமப்புற 100 நாள் வேலை திட் டத்தில் பணியாற்றியோருக்கு, 3 மாதங் களுக்கு மேல் ஒன்றிய மோடி அரசு ஊதி யம் வழங்காததைக் கண்டித்து விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட் களே உள்ளன. கடை வீதிகள் களை கட் டியுள்ளன. உயர் கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், விவ சாய தொழிலாளர்கள் பண்டிகைக்கு தயாராக முடியாமல் ஒப்பாரி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரக்கமற்ற ஒன் றிய மோடி அரசு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட் டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு 3 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் புத் தாடை எடுக்க முடியவில்லை. பலகாரங் களுக்கான தயாரிப்புகளை செய்ய முடி யவில்லை. சுமார் 4 மாத கால கூலி பாக்கி யால் அன்றாட வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது. இதனை கண்டித்து திங்களன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழு விய போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊராட்சி அலுவலகங்கள் முன்பு அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் வட் டம், செல்லம்பட்டி ஊராட்சி, கீழானூர் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன் றிய செயலாளர் கே.குமரேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலா ளர் எம்.முத்து, மாநிலக்குழு உறுப்பி னர் இ.கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளாளப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தசாமி தலைமையிலும், பூனையானூரில் மாவட்ட துணைத்தலைவர் பி.கிருஷ்ண வேணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் கனரா வங்கி முன்பு நடைபெற்ற ஒப்பாரி போராட் டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலைவர் ஜி.செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், தாலுகா செயலாளர் ஏ.கே.பழனி சாமி, பொருளாளர் கே.குருசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இதில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு, பறையிசை அடித்து, ஒப்பாரி வைத்து, தங்களது எதிர்ப்பினை வெளிப் படுத்தினர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வி.ஆர்.மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் செயலாளர் கே.சி.ரங்கசாமி, பொருளாளர் ஜி.அய்யாசாமி, மாதர் சங்க பொருளாளர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடுமுடி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஒப்பாரி வைக் கும் போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலைவர் ஆர்.அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். சங்கத்தின் மூத்த தலைவர் ஆர்.சிவலிங்கம் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலா ளர் கே.சண்முகவள்ளி, மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.கனகவேல் உட்பட 200க்கும் மேற்பட்ட விவசாய தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். அதே போல் மொடக்குறிச்சி வட்டம், மின்னப் பாளையம் தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி.தங்கவேல் கண்டன உரையாற்றினார். இதில் வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் லோகநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
இதேபோன்று சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒரு பகுதியாக பனமரத்துப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கணபதி தலைமை வகித் தார். சங்ககிரியில் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர், ஓமலூரில் சின்ராஜ் தலைமையிலும், எடப்பாடியில் தங்க வேல் தலைமையிலும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சபாபதி, ஒன்றிய தலைவர் பி.செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.