திருப்பூர், அக்.11- தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைத்து, வேலை அளவை குறைப்பதுடன், தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை யும் குறைத்து வரும் ஒன்றிய மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண் டித்து திருப்பூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று மாதங்களாக கொடுக்கப்படாத ஊதி யத்தை உடனே வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைவருக்கும் 100 நாட்கள் முடியும் வரை சாக்குப் போக்கு சொல்லாமல் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், 200 நாளாக உயர்த்த வேண்டும். தொழிலாளிகளுக்கு செல் போன் செயலியில் வருகை பதிவு செய் யும் முறையை ரத்து செய்ய வேண் டும். ஆளில்லா விமானம் மூலம் தொழி லாளர்களை கண்காணிக்கும் முறையை கொண்டு வரும் மோடி அரசு அதைக் கைவிட வேண்டும். தேசிய வேலை உறு தித்திட்டத்தில் வேலையையும், நிதியை யும், கூலியையும் தொடர்ந்து குறைத்து இத்திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பரணி ஆர்.சீனிவாசன் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ. பஞ்ச லிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், சங்கத் தின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிர மணியம், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி, ஒன்றிய செய லாளர் எஸ்.அப்புசாமி, பனியன் சங்க செயலாளர் பி.கே.கருப்புச்சாமி, ஓய்வூ தியர் சங்கத் தலைவர் க.சண்முகம், ஒன் றியப் பொருளாளர் பி. கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர். 7 ஊராட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங் கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சங்க நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலு வலரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனு வைப்பெற்ற அவர், ஆயுத பூஜைக்குள் சம்பளம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஊத்துக்குளி ஆர்.எஸ். தபால் நிலை யம் முன்பாக சங்கத்தின் தாலுக்கா தலைவர் ஆர்.மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர்.ஜி.சுந்தரம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சரஸ் வதி, விவசாய தொழிலாளர் சங்க தாலுக் காச் செயலாளர் கே.பிரகாஷ், துணைத் தலைவர் கே.எஸ்.ராமசாமி, கமிட்டி உறுப்பினர் கே.எஸ்.கருப்புசாமி ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். கமிட்டி உறுப்பினர் ஆறுமுகம், விஜயன், ராங்சாமி, ஆ. செல்வி, வேலுசாமி, கட்டுமான சங்க தாலுக்காத் தலைவர் சி.மகேந்திரன் மற் றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டார். தாலுக்காப் பொருளாளர் எ.எம்.பழனிசாமி நன்றி கூறினார். இதேபோன்று, அவிநாசி தபால் அலு வலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பி னர்கள் கே.குருநாதன், கே.பொன்னு சாமி, சி.மரகதம், பி.மகேஸ்வரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வர மூர்த்தி, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், விதொச ஒன்றிய தலைவர் வி.பி.முருகேசன், ஒன் றிய துணைச்செயலாளர் ஆர்.பழ னிச்சாமி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிச் சாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் என்.கருப்புசாமி, கட்டுமான மாவட்டப் பொருளாளர் ஏ.ராஜன், வேலா யுதம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பி.சாமியப்பன், விவசாய சங்க ஒன்றியப் பொருளாளர் பி.குமாரசாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வி.மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.