districts

img

மோடியின் கனவு சரிகிறது; இந்தியா கூட்டணி முன்னேறுகிறது - இரா.முத்தரசன் பேட்டி

தருமபுரி, ஏப்.3- பாஜகவுக்கு எதிராக பிரச்சனைகளை திசை திருப்பவே கட்சத்தீவு குறித்து பாஜகவினர் பேசி வருகின்றனர். மோடியின் கனவு சரிந்து வருகி றது, இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தருமபுரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சத்தீவை மீட்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுக ளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் இதுதொடர்பாக ஒரு கடிதம் கூட அவர் இலங்கை அரசுக்கு எழுதவில்லை என இலங்கை அமைச்சரே தெரிவித்திருக்கிறார். தற் போது பாஜகவுக்கு எதிராக பிரச்சனைகளை திசை திருப்பவே கட்சத்தீவு குறித்து பாஜகவினர் பேசு கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்த லில் பாஜக 31 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே  பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவர்களுக்கு எதிராக 69 சதவிகிதம் வாக்குகள் பெற்ற கட்சிகள் பிளவுப்பட்டு அந்தத் தேர்தலை சந்தித்து. ஆனால், அந்தக் கட்சிகள் தற்போது இந்தியா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. பிரதமரின் 400 இடங்களை வெற்றி என்கிற கனவு தற்போது சரிந்து வருகிறது. அதிமுக-வின் வேடம் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அம லாக்கத்துறை, வருவமானவரித்துறை, சிபிஐ  ஆகியவற்றை ஒன்றிய அரசு தனது உத்தரவுக் காக காக்க வைத்திருக்கும் நிலைதான் கடந்த 10  ஆண்டுகளாக நீடிக்கிறது. கடந்த காலத்தில் பாஜக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், குடியு ரிமை திருத்தச் சட்டம் என எல்லாவற்றிற்கும் ஆதர வாக செயல்பட்டு, தற்போது பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக அதிமுக வேடம் அணிந் துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜகவை விமர்சனம் செய்வதை தவிர்த்து வருகிறார். அதி முகவின் இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்க மாட்டார்கள். பாமகவின் எண்ணம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தனது கட்சி தொடங்கிய காலத்தில் அவர் அளித்த உறுதிகளை மக்கள் மறந்துவிட்டனர் என அவர் கருதுகிறார். மக்கள் எதையும் மறக்கவில்லை. சமூகநீதி பேசுகிற அவர், சமூகநீதிக்கு எதிரான  இடஒதுக்கீட்டு கொள்கையை ஏற்காத பாஜக வுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? என விளக்கம ளிக்க வேண்டும். பாமக சார்பில், தருமபுரி மக்க ளவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், நீர்  மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கு வோம் என கூறி வருகிறார். அவர்களது கட்சியினர்  ஏற்கெனவே பலர் மக்களவை உறுப்பினர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்களெல்லாம் இந்த கோரிக்கைகளை ஏன் நிறைவேற்றவில்லை? எனவே பொய்யாக வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறலாம் என்கிற பாமகவின் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள  எங்களது கூட்டணி உறுதியாக பயணிக்கிறது. எதிரணியில் இருந்த கூட்டணி தற்போது பிளவுப் பட்டு இரண்டாக களம் காண்கிறது. எனவே, தமி ழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந் தியா கூட்டணி வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது. இவ்வாறு முத்தரசன் பேசினார். இப்பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். தேவராஜன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா ளர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.