ஈரோடு, மே 31- தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சார்பில், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சங்க உறுப்பி னர்களுக்கு கோபி அருகே சிறுவ லூர் கிராமத்தில் செவ்வாயன்று நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி தொடங்கியது. ஈரோடு மாவட்ட வருவாய் அலு வலர் ச.சந்தோஷினி சந்திரா தலை மையில், வீட்டுவசதி மற்றும் நகர் புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இப்பயிற்சியினை தொடங்கி வைத்து, பயனாளிக ளுக்கு இலவச பனைப்பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களை வழங் கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ் நாடு பனைபொருள் வளர்ச்சி வாரி யத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்ப டும் கூட்டுறவு கருப்பட்டி விற் பனை சம்மேளனம் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கூட் டுறவு நிறுவனமாகும்.
இதில், 83 ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங் கங்கள் உறுப்பினராக உள்ளது. மேலும், சுமார் 20 ஆயிரம் நபர்கள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். சம்மேளனத்தில் ஆண்டு ஒன்றிற்கு 4 கோடியே 50 லட்சம் வணிகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஒரு கூறான பனை வெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில் நுட்பத்தை பயன்ப டுத்தி தரமான பனை வெல்லம் மற் றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள்தயாரிப்பது தொடர் பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 தினங்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முறைகள் வழங்கப்படும். மேலும்,12 வகை யான பனைத் தொழிலுக்கு தேவை யான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் மதிப்பு கூட்டப்பட்ட பனை வெல்லம், பனஞ் சர்க்கரை, பனங்கற்கண்டு, பேக்கரி தயாரிப்பில் பனஞ்சர்க்கரை பயன் படுத்துதல், பதநீர் பதப்படுத்துதல் தொழில் நுட்பம், நுங்கு தொழில் நுட் பம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாரம்பரிய பனை தொழிலாளர்களின் வாழ்வா தாரம் மேம்படும். உற்பத்தி செய்யும் பொருட்கள் அருகிலுள்ள ஆரம்ப பனைவெல் லம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வும், மாவட்ட மற்றும் மாநில சம் மேளனங்களின் நேரடி விற்பனை நிலையங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 11 பனைபொருள் அங்காடிகள், சம்மேளன கட்டுப்பாட்டில் உள்ள 10 கிளைகள், காதி கிராப்ட், வேளாண்மை விற்பனை கூடங்கள் ஆகியவற்றின் மூலமாக சந்தைப்ப டுத்தபட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித் தார்.