districts

img

வனக்கிராமங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள்

கோவை, டிச.24- வனக்கிராமங்களில் நடமாடும் மருத்துவ வாகன வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்  என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட 4 ஆவது மாநாடு கணபதி சிஜடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க  அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் தலைமை வகித் தார். தோழர்கள் சாடிவயல் காளிச்சாமி, ஆனைமலை மல்லிகா ஆகியோர் நினை வரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, சங்க கொடியை கே.பத்மினி ஏற்றி வைத்தார். தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளர் கே.வேலுச்சாமி வரவேற்புரை யாற்றினார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வீ.சந்திரசேகரன் வேலையறிக் கையை முன்வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.செல்வன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

இம்மாநாட்டில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பழங்குடியின மக்கள் வசிக் கும் பழுதடைந்த வீடுகளை சீரமைத்தும், புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மின்சாரம் மறுக்கப்பட்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வீடுகளுக்கு  மின்சாரம்  வழங்க வேண்டும். தாட்கோவில் விண்ணப்பித்துள்ள பழங்குடியன இளைஞர் களுக்கு உடனடி கடன் வழக்க வேண்டும்.  தாட்கோவில் விண்ணப்பம் செய்த தொழில்  கடன்களுக்கு கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொன்டு தொழிற்கடன் வழங்க வேண்டும்.மழைவாழ்  மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று வர போக்குவரத்து வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வன உரிமைச்சட்டம் 2006-ன்படி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட 10 சென்ட் நிலம் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவ வாகனங் களை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் கோவை  மாவட்ட தலைவராக வேலுச்சாமி, செயலாள ராக வி.எஸ்.பரமசிவம், பொருளாளராக முத் தம்மாள் உட்பட 17 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடியில், மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். எம்.பி.சரவணன் நன்றி கூறினார். இதில், ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.