அவிநாசி, டிச.23- அவிநாசி அருகே பாறைகுழிகளில் குப்பை கொட்டும் இடத்தை சட்டமன்ற உறுப்பினர் தனபால் ஆய்வு செய் தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுரு கன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பிரிவு மற்றும் கானக்காடு பாறைக்குழிகளில் திருப்பூர் மாநக ராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு பாறை குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வந்த னர். ஆகவே திருப்பூர் மாநகராட்சி இப்பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து பலகட்ட போராட்டங் களை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவிநாசி சட்டமன்ற உறுப்பினரான தன பால், திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை கொட்டி வரும் பாறை குழியை வியாழனன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதன்பின் இப்பிரச்சனை குறித்து சட்ட மன்றத்தில் குரல் எழுப்புவதாக உறுதியளித்தார்.