ஜம்புக்கல் மலையில் தொடரும் இயற்கை அழிப்பை தடுக்க தவறிய வருவாய் மற்றும் காவல்துறை நடவ டிக்கையை கண்டித்து ஆண்டியகவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு அப்பகுதி விவசாயிகள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.