districts

img

பெருந்துறை சிப்காட்டில் அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு, நவ.14- பெருந்துறையிலுள்ள சிப்காட்  தொழிற்பேட்டையினை அமைச் சர்கள் சு.முத்துசாமி, சிவ.வீ.மெய் யநாதன் ஆகியோர் நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டனர்.  ஈரோடு மாவட்டம், பெருந் துறை சிப்காட் தொழிற்பேட்டை யில் செயல்படும் தொழிற்சாலை யில் இயங்கும் பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி, சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின் அமைச்சர்கள் பேசுகையில், தொழிற்சாலைகள் மூலமாக வெளி யேறும் கழிவுகளால் பொதுமக் களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப டாத வகையில் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பெருந்துறை, சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளில் பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும், சிப்காட் வளா கத்தில் உள்ள தொழிற்சாலைகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தாமல், வெளியிலிருந்து தண்ணீர் பெற்று  தொழிற்சாலைகளுக்கு பயன்ப டுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ.40  கோடி மதிப்பீட்டில் சுமார் 20 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய் யும் வகையில் சுத்திகரிப்பு  நிலையம் அமைப்பதற்கு நடவடிக் கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோன்று, இந்த தொழிற்சா லைகளிலிருந்து வெளியேறும் சுமார் 63 ஆயிரம் டன் திடக்கழி வுகளை இராமநாதபுரத்தில் உள்ள  ஆலைக்கு மறுசுழற்சி செய்ய குறிப் பிட்ட காலத்திற்குள் எடுத்து செல்வ தற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. பொதுமக்கள் மத்தியில் ஏற்ப டுத்திய விழிப்புணர்வின் காரண மாக தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்பின் மூலம் கடந்த ஆண் டை விட காற்று மாசுபாடு என்பது  தமிழ்நாடு முழுவதும் அதிகளவில்  குறைந்துள்ளது. குறிப்பாக, சென் னையில் மட்டும் சுமார் 40 விழுக் காடு அளவிற்கு காற்று மாசுபாடு குறைந்துள்ளது, என்றனர். இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பி னர் அந்தியூர் ப.செல்வராஜ், மாசு  கட்டுப்பாட்டு வாரியம் உறுப்பினர் கண்ணன், இணை தலைமை சுற் றுச்சூழல் பொறியாளர் மலை யாண்டி, ஈரோடு வருவாய் கோட் டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மோகன், பழனிச்சாமி, தொழிற்து றையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர்  உடன் இருந்தனர்.