ஈரோடு, அக்.18- சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பல்வேறு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர்கள் பேசுகையில், சென்னிமலை முருகன் கோவிலில் புதியதாக வணிக வளா கம், பக்தர்கள் இளைப்பாறும் கூடம், திருக்குளத்தைச் சுற்றி சிமெண்ட் கான்கிரீட் தளம் உட்பட 24 பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக் கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும், இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிவாரம் முதல் மலைக்கோவில் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலையை சீரமைக்கும்பணி ரூ.6.70 கோடி மதிப்பீட் டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் துவங் கப்படவுள்ளது. அதேபோன்று மலைக்கோயிலில் பக்தர்கள் உணவருந்தும் கூடம், திருக்குளம் மதில் சுவர், கோவிலில் கொடி மரம் உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ள தாக, அமைச்சர்கள் தெரிவத்தனர். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாபதி, ஈஸ்வரன் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்ட னர்.