கோவை, ஜூலை 17- “அக்ரி இன்டெக்ஸ் - 2022” வேளாண் கண் காட்சியினை வெள்ளியன்று கோவை கொடி சியா வளாகத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வி.செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். கோவை மாவட்டம், கொடிசியா வளா கத்தில் “அக்ரி இன்டெக்ஸ் - 2022” வேளாண் கண்காட்சியினை வெள்ளியன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்த னர். இதையடுத்து “அக்ரி இன்டெக்ஸ் - 2022” புத்தகத்தை அமைச்சர்கள் வெளியிட்ட னர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், வேளாண்மை துறைக்கு என்று தனியாக நிதி நிலை அறிக் கையை தாக்கல் செய்யும் வாய்ப்பு முதன்முத லாக எனக்கு வழங்கப்பட்டது. இன்று வேளாண்மை மதிக்கப்படுகின்றது. இக்கண் காட்சிக்கு அதிகமான விவசாயிகள் வருகை தந்துள்ளனர். விவசாயத்தில் முன்னேற வேண் டும் என்ற எண்ணம் அனைத்து விவசாயிகளி டமும் உள்ளது. வேளாண் தொழில் நிறுவனங்கள் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட் டங்கள், கிராமங்களில் உள்ள விவசாயிகள் கண்காட்சி வருகை தருகின்றனர். தற்போது விவசாயம் கூலி வேலைக்கு ஆட்கள் குறை வாக உள்ளனர். எனவே, விவசாயம் தொழில் சார்ந்த, தொழில்நுட்ப கருவிகள், விவசா யத்தை நவீனமாயமக்குதல் உள்ளிட்டவை பற்றி அறிந்து கொள்ள இக்கண்காட்சி மிக வும் பயனுள்ளதாக அமைகிறது. செல்போனிலே விவசாயத்திற்கு தண் ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டார் ஆன் செய்யும் கருவி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தாக உள்ளது. இரவு நேரங்களில் இது பாது காப்பானதாகவும் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பு கள் பொதுமக்களிடமும், விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு இதுபோன்ற கண் காட்சி மிகவும் உபயோகமாக உள்ளது. கொரோனா காலத்தில் தொழில் நிறுவ னங்கள் மூடப்பட்டிருந்தபோதும், விவசாயம் நடைபெற்றது. விவசாயிகள் உழைத்து கொண்டிருந்தனர். ஏனெனில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சாப்பிட் டில் கை வைக்க முடியும். 6 மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3 முதல் 4 லட்சம் ஏக்கர் இடங்களில் கூடுதலாக விவசாயம் செய்யும் வாய்ப்பி னால், உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகி யுள்ளது. இலவச மின்சாரக் கட்டணத்தை அரசு ஏற்று கொண்டுள்ளது, என்றார்.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறுகை யில், 2000 ஆம் ஆண்டு முதலவதாக தொடங் கிய இக்கண்காட்சியில் 150 நிறுவனங்கள் பங் கேற்றனர். இதன்மூலம் 25 ஆயிரம் உழவர்கள் பயன்பெற்றுவந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளில் இக்கண்காட்சியில் 497 நிறு வனங்கள் பங்கேற்று உள்ளனர். 2 லட்சத்திற் கும் மேற்பட்ட உழவர்கள் பயன்பெறும் வகை யில் வளர்ச்சியடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் தொழில் துறைக்கு கொடுக் கும் அதே அளவு முன்னேற்றம், அதே அளவு தொழில்துறையை சார்ந்துள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஒரே ஆண்டில் 3 அரசு வேளாண் விவசாய கல்லூரிகள் அறி விக்கப்பட்டு, அதற்கான இந்த கல்வி ஆண் டிலே மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப், தமிழ்நாடு வேளாண் பல் கலைகழக துணை வேந்தர் வி.கீதாலட்சுமி, மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றி செல்வன், கொடிசியா தலைவர் வி.திருஞா னம், கொடிசியா செயலாளர் ஆர்.சசிகுமார், அக்ரி இன்டெக்ஸ் சேர்மன் என்.கிருஷ்ண ராஜ், முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழ னிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.