districts

img

கொடிவேரி குடிநீர் திட்ட நீருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

கோபிசெட்டிபாளையம், அக். 7- கோபி அருகே உள்ள கொடி வேரி கூட்டு குடிநீர் திட்ட நீருந்து  நிலையத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு மேற்கொண் டார். ஈரோடுமாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றிலிருந்து ஈரோடு, திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கொடிவேரி கூட்டு  குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டது.  கொடிவேரி கூட்டுகுடிநீர் திட் டத்தின் மூலம் ஈரோடு , திருப்பூர்  மாவட்டங்களில் உள்ள 8 பேரூ ராட்சி, 541 கிராம மக்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர்தேவை அதிகரித்து வருவதால், கொடி வேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் விநி யோகிக்கும் குடிநீரை கூடுதலாக  விநியோகம் செய்ய வேண்டும் என  ஈரோடு, திருப்பூர் மாவட்ட பொது மக்கள், அமைச்சர்களுக்கும், மாவட்ட  ஆட்சியருக்கு கோரிக்கை  விடுத்து வந்தனர். இதன்தொடர்ச்சியாக, கொடி வேரி கூட்டு குடிநீர் திட்டத்தின்  தலைமை நீருந்து நிலையம், குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குடி நீர் வழங்கல் திட்ட அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, குடி நீருக்காக தலைமை நீருந்து நிலை யத்தில் இருந்து சுத்திகரிப்பு  நிலை யத்திற்கு தண்ணீர் வரும் அளவு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீரின் அளவுகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து, செய்தியாளர் களிடம் அமைச்சர் பேசுகையில், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத் தின் மூலம் ஈரோடு, திருப்பூர் மாவட் டத்தில் 2050ம் ஆண்டு மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில்  கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டத் தில் பொதுமக்களுக்கு குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அதன டிப்படையில் கொடிவேரி கூட்டு குடி நீர் திட்டதின் நீருந்து நிலையங் களில் ஆய்வு மேற்கொண்டோம்.  கொடிவேரி கூட்டு குடிநீர் திட் டத்தில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட  பொதுமக்களுக்கு கூடுதலாக குடி நீர் வழங்க நீரேற்று நிலையத்தில்  தண்ணீர் உறுஞ்சும் தற்போதைய  அளவை விட கூடுதலாக தண் ணீரின் அளவை படிப்படியாக உயர்த்தி ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் உள்ள 8பேரூராட்சி, 541 கிராம மக்களுக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுத லாக குடிநீர் வழங்கப்படும் என் றார்.  

இந்த ஆய்வின்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீர ராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அதி காரிகள் உடனிருந்தனர். மேட்டுப்பாளையம் இதேபோன்று, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்று நீரை ஆதார மாக கொண்டு திருப்பூர் மாநக ராட்சிக்கு குடிநீர் கொண்டு செல் லும் வகையில் நான்காம் கூட்டு குடி நீர் திட்டப்பணிகள் நடைபெற்று வரு கிறது. சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நக ராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் நடை பெற்று வருகிறது. இத்திட்டப்பணி களை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சனியன்று  நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர்  நான்காம் கூட்டு குடிநீர் திட்டப் பணிக்காக பவானி ஆற்றில் நீர்  எடுக்கும் பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டப்பணி களை விரைவுபடுத்த அறிவுறுத் தினார். இதன் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், மேட்டுப்பாளையம் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் விளாமரத்தூர் பகுதி யில் இருந்து தண்ணீர் எடுக்கும்  திட்டத்திற்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என் றார்.  ஆய்வு பணியின் போது அமைச் சருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  கிறிஸ்து ராஜ், திருப்பூர் மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.