districts

img

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

ஈரோடு, அக்.17- ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த உயர் அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் வியாழனன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை யில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து,  துறை சார்ந்த உயர் அலுவலர்களுட னான ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. இதில், புதுமைப்பெண் திட்டம்,  தமிழ்ப்புதல்வன் திட்டம், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், ஊட்டச்சத்து விகிதம், கிராம அளவில்  குழந்தைகள் பாதுகாப்புக் குழு, எண் ணும் எழுத்தும் திட்டம் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாடுகள், உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், 15 ஆவது நிதிக்குழு மானி யத்தின் கீழ் நடைபெற்று வரும் பணி கள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணி கள், ஆரம்பச் சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித் தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி னார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல் வராஜ், இணை இயக்குநர் (மருத்து வப் பணிகள்) மரு.அம்பிகா, துணை  இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல் வர் ரவிக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.