கோவை,பிப். 29- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் திடீர் ஆய்வினால் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதி களை இரவோடு இரவாக பணிகளை முடித்து கொடுத்த அதிகாரிகள், விடுதி மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். கோவையில் வெள்ளியன்று நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத னன்று விமானம் மூலம் கோவை வந்த டைந்தார். விமான நிலையம் வந்த டைந்த அவர் பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின்போது விடுதி வளாகத்தில் இருக்கக்கூடிய அறைகள் கழிவறை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவின் தரம் ஆகியவை குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர வேண் டும், விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் கேட்ட வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படியும் மாவட்ட ஆட்சிய ருக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக விடுதி யில் தேவைப்படும் வசதிகளையும் தூய்மைப் பணிகளைகளை செய்த கோவை மாநகராட்சி நிர்வாகம் X வலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் இரவோடு இரவாக விடுதி யில் தூய்மைப் பணிகள் மேற்கொள் வது அடிப்படை வசதிகளை மேம்ப டுத்துவது ஆகியவை இடம் பெற்றுள் ளன. இப்பணிகளை விரைந்து முடித்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதி மாணவர்கள் நன்றி தெரிவித்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று இருந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தும், அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததை மாவட்ட நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியதும், வியாழனன்று அவர் நிகழ்வு முடித்து சென்னை செல்வதற்கு மாணவர் விடுதி பளிச்சென்று மாறியது மாணவர்க ளையே திகைக்க வைத்துள்ளது.