districts

img

திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டம் அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்

திருப்பூர், பிப்.12- திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதய நிதி ஸ்டாலின் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டம் உட்பட  ரூ.1281.16 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை திறந்து  வைத்தார். அத்துடன் ரூ.20.51 கோடி மதிப்பீட்டில் புதிய  திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5,020 பயனாளிகளுக்கு  ரூ.60.44 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி  மைதானத்தில் ஞாயிறன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், இந்த விழா நடைபெற்றது. இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா,  கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனை வர் தா.கார்த்திகேயன், மேயர் ந.தினேஷ்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் வ.தட்சி ணமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் இயக்குநர் சு. சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், அயல கத் தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திக்கேய சிவசே னாதிபதி, துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர் கள் கலந்து கொண்டார்கள்.