கோவை, ஜன.22- பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா தொடர் பாக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பு ஆய்வு மேற்கொண்டார். கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா வெகுவாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி மாதம் சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இத னையடுத்து, சிவராத்திரி விழாவை ஒட்டி பல்வேறு பணி கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, இந்து சமயம் மற் றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேரூர் பட்டீஸ் வரர் கோவிலுக்கு வந்தார். விழா நடத்துவது தொடர்பாக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதி காரியுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அங்கு அமைக்கப்படும் அரங்கம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோ சனை மேற்கொண்டார். சிவராத்திரி நடக்கும் இடத்தில் அமைக்கப்படும் கடைகள் மற்றும் இன்னும் இதர பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.