districts

img

10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு

கோவை, ஏப். 29 - தமிழகத்தில் 10 கோடி மரங்களை  நடவு செய்ய இலக்கு  நிர்ணயித்திருப்பதாக, கார்பன் சமநிலை கருத்தரங்கில் பங் கேற்ற சுற்றுச்சுழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித் தார்.  கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்ட லில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை  அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கார்பன் சமநிலை குறித்து  மிகச்சிறிய இலக்கு வைத்து இந்த கருத்தரங்கம் நடைபெறு கிறது. காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. நவீன தொழில்நுட் பம், பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை  வளர்ந்து வருகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால்  அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலமாக தமிழ்நாடு மற்றும்  ஆந்திரா.

இதன்காரணமாகவே, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், போக்கு வரத்து மற்றும் தொழில்துறை தான் கார்பன்களை அதிகள வில் வெளியிடுகின்றது. எங்கள் ஊரில் வெப்பம் 105 டிகிரியை  எட்டியுள்ளது. என் வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. ராமேஸ்வரம் மற்றும் ராஜபா ளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட  திட்டங்கள் தொடங்கி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத் திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளோம். டெல்டா  மண்டலமான ஐந்து மாவட்டங்களில் கார்பன் வெளியேற் றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இளைஞர் கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது  மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற இளைஞர்களை பாராட்ட  100 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய்  வரை பரிசு அளிக்க உள்ளோம். எங்காவது பிளாஸ்டிக் பொருட் களை பார்த்தால் கோபம் வருகிறது. அந்த கோபம் ஒவ்வொரு  மனிதருக்கும் வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற  உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. மீண்டும் மஞ்சப்பை என்பது அற்புதமான திட்டம் என்றார். 

பி.ஆர்.நடராஜன் எம்பி.,

இந்நிகழ்வில்  பங்கேற்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், உலகம் முழுவதும் தற் போது கார்பன் சமநிலை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் முன்னெடுப்பாக தமிழகத்தில் முதன்முறை யாக கார்பன் சமநிலை குறித்த முதல் கருத்தரங்கம் கோவை யில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கருத்தரங்க தரங்கில், சூழலியலாளர்கள், அதிகாரிகள் முன்வைக்கும் கருத்துகளை உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்துத்  சாத்தியங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக,  கார்பன் அதிகரிப்பு என்பது போக்குவரத்து மற்றும் மின் சாரத்துறை சார்ந்தே உள்ளது. இதனை முறைப்படுத்து வதோடு, வனத்துறையை இணைத்து கார்பன் சமநிலை  என்கிற இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்றார். இந்நிகழ்வில், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா  சாகு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  மேயர் கல்பனா ஆனந்த் குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜ், சிறு துளி அமைப்பின் வனிதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். முன்னதாக அமைச்சர் மெய்யநாதன் செய்தியா ளர்களுக்கு பேட்டியளிக்கையில், 2050க்குள் கோவை முழுவ துமாக கார்பன் சமநிலையை எட்டுகின்ற வகையில் என் னென்ன திட்டங்கள் தொடங்கலாம் என்பதன் அடிப்படையில்  இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. கோவை மாவட்டம்  முழுவதுமாக வனத்தின் பரப்பளவுகளை அதிகரித்து எங்கெங் கெல்லாம் பொது இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மரங் களை நடவு செய்து கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவ தற்கான நிலைகளை எட்டுவதும்,

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவுகளை குறைப் பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆண்டு 2 கோடிக்கும் மேலாக மரங்கள் நடவு செய்யப்பட் டுள்ளது. கோவையில் மட்டும் 10 லட்சம் மரங்கள் நடவு  செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அந்த இலக்கை அதிகப்ப டுத்துவோம் என கூறியுள்ளனர். அதேபோல இந்த ஆண்டு 10  கோடி மரங்களை நடவு செய்ய வேண்டும் என்று இலக்கினை  நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசாங் கம் மட்டுமல்லாமல் தன்னார்வலர்களும் ஒவ்வொருவரும் முன் வந்து மரங்களை நடவு செய்தால் இந்த இலக்கை எளிதாக  எட்ட முடியும். எனவே, அனைவரும் உலகம் வெப்பமய மாதலை தடுப்பதற்கு மரங்களை நடவு செய்யுங்கள், இயற் கையையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கு பிளாஸ்டிக்  பொருட்களை தவிர்த்து மஞ்ச பைகளை உபயோகப்ப டுத்துங்கள். வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த  பயனும் இல்லை, அவ்வாறு எங்கேனும் வெளிநாட்டு மரங்கள்  நடவு செய்யப்பட்டு இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவர்  உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்றார்.