உதகை, ஏப்.2- தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட மருத் துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகள், மருந்து, மாத்திரைகள் போதுமான அள விற்கு தயாராகவும், கையிருப்பில் இருப்ப தாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் தமிழ்நாடு சுற்றுலா துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, “உதகை 200” ஆவது ஆண்டை பிரபலப்படுத்தும் நோக்கில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஞாயிறன்று நடை பெற்றது. 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயத்தை சுகாதாரத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, 30 கிலோ மீட்டர் நடைபெற்ற பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரியில் விளையாட்டு பூங்கா அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாத காலமாக உலகம் முழு வதும் கொரோனா தொற்று இல்லாத நிலை நீடித்து வந்தபோது, அண்மை காலமாக ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்பட்டு ஒய்.பி.ஏ. புதிய வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந் தியாவில் நாள்தோறும் 50க்கும் கீழ் இருந்த தொற்று, தற்போது நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக 24 மணி நேரத்தில் மராட்டியம், கேரளா, கர்நா டகா, தில்லி, இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 300 நபர்களிலிருந்து 700 நபர் கள் வரை புதிய வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 24 மணி நேரத் தில் 139 நபர்களுக்கு புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வகை தொற்றானது மருத்துவமனைகளில் அதிகளவு பரவுவ தால் தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரத்து 333 அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் புற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் சிறப்பு படுக்கை வசதியுடன், ஆக் சிஜன் போதுமான அளவிற்கு மருந்து, மாத் திரை வசதியுடன் தயார் நிலையில் இருக் கிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தபட்டுள் ளது. இந்த வகை தொற்று பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என மருத்துவ வல்லுநர்க ளும், அறிவியல் ஆய்வாளர்களும் கூறியுள் ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் மருத் துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வெளிநாடு களிலிருந்து சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு வரும் துபாய் மற்றும் சிங்கப்பூர் பயணிகளுக்கு தொற்று அதிகளவு இருப்பதாக கண்டறியப்பட்டுள் ளது. தொற்று பாதிப்பு உள்ள பயணிகள் தனி மைப்படுத்தப்படுகின்றனர். என்றார். முன்னதாக, படகு இல்லத்தில் விளை யாட்டு பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட் டியில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், சுகாதார பணி கள் இணை இயக்குநர் பாலுசாமி, மண்டல சுற்றுலா வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.