districts

img

பொங்கல் வேட்டி, சேலைகள்: ஜனவரி 10க்குள் உற்பத்தி செய்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்

திருப்பூர், டிச.10- 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட் டைதாரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் இது வரை 50 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, எஞ்சிய  வேட்டி, சேலைகளை ஜனவரி 10ஆம் தேதிக்குள் உற்பத்தி  செய்து முடிக்க அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டு இருப்ப தாக மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி தெரிவித்தார். விசைத்தறி வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல்  முன்னேற்றம் குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும்  திருச்செங்கோடு சரகங்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கி ழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாநில கைத்தறி  மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவி டர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச் சர் ஆர்.காந்தி கூறியதாவது: வேட்டி, சேலைகள் கொள்மு தல் செய்யப்பட்டு கிடங்கில் உள்ளவற்றை மாவட்ட வாரி யான தேவை அடிப்படையில் தாலுகா அலுவலங்களுக்கு  அனுப்புவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. வேட்டி, சேலை  வழங்கும் திட்டத்திற்குத் தேவையான 1 கோடியே 77 லட்சம்  வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சம் சேலைகளில் இது வரை 50 சதவீத உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும்  ஜனவரி 10ஆம் தேதிக்குள் உற்பத்தியை நிறைவு செய்ய,  அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படை யில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நடப்பு ஆண்டில் இதுவரை வழங்கப்பட்ட வேட்டி, சேலை களில் மாறுதல் செய்யப்பட்டு, சேலைகளில் 15 புதிய வண் ணங்களிலும், வேட்டியில் கரை 1 அங்குலத்தில் உற்பத்தி செய் யப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங் குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1 லட்சம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெச வாளர்கள் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு வேலை வாய்ப்பு  பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் மூலம் உப  தொழிலில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்ற னர் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில், திருப்பூர் சரகத்திலுள்ள கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத் தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பிற்கு கடன் உதவியும், கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து 60 வயது  பூர்த்தியடைந்த கைத்தறி  நெசவாளர்களுக்கு முதியோர் ஓய் வூதியம் பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை  அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத் தறி துறை ஆணையர் த.பொ.ராஜேஷ், துணிநூல் துறை  ஆணையர் மு.வள்ளலார், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்,  திருப்பூர் மாநகராட்சி  மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற் றனர்.