கோவை, ஜூலை 17- கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் சுங்கம் பகுதி யில் தொடர் விபத்து ஏற்படுகி றது. தற்போதுவரை மூன்று பேர் உயிர் பலியான நிலை யில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந் தில் பாலாஜி விபத்து ஏற்பட்ட பாலத்தின் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து அமைச்சர் வி.செந் தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகை யில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட திருச்சி சாலை சுங்கம் பகுதியில் பார்க்கிங் சிக்னல் முதல் ரெயின்போ சிக்னல் வரை 3.15கி.மீ நீளத்திற்கு ரூ.253 கோடி மதிப்பீட்டில் மேம் பாலம் கட்டப்பட்டுள்ளது. சரியான திட்டமி டல் இல்லாமலும், வழிமுறைகளை பின்பற்ற மாலும் கட்டப்பட்டுள்ளதால் விபத்துகள் நேர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து விபத்து ஏற்பட்டதால் மாவட்ட நிர் வாகத்தின் சார்பில் வேகத்தடை அமைக்கப் பட்டது. மேம்பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் வேகம் 40கி.மீ இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிசிடிவி கேம ராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் தற்காலிக தீர்வுகள் தான். இந்த பாலத்தில் எவ்வித விபத்துகளும் ஏற்படாத வகையில் பாலத்தின் இரண்டு பக் கங்களிலும் தனியார் நிலங்களை எடுத்து பாலத்தினை நேராக வடிவமைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. 70 டிகிரியில் திரும்பும் வகையில் மிக குறுகலான வடிவமைப்பில் உள்ளது. இதனை எவ்வாறு மாற்றி அமைப் பது என்பது குறித்து தமிழக முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய வழிகாட்டு தலின்படி சம்பந்தப்பட்ட துறையினர் பங்கேற் கும் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.