districts

img

ஊட்டியில் நள்ளிரவில் கரடி நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்

உதகை, ஜூன் 12- ஊட்டி நகரின் மையப் பகுதி யில் நள்ளிரவில் கரடி உலவி வரு வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஊட்டி நகரை சுற்றி தொட்ட பெட்டா, கேர்ன்ஹில், கம்பி சோலை உள்ளிட்ட வனப்பகுதி கள் உள்ளது. இந்த வனப்பகுதி களில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந் நிலையில், சனியன்று  வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய கரடி, ஊட்டி மையப்பகுதியான காபி ஹவுஸ் அக்ரஹாரம் தெருவில் நள்ளிரவில் உலா வந்துள்ளது. பின்னர், சல்லிவன் கோர்ட் ஓட்டல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.  கரடி உலாவந்த சம்பவம் குறித்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந் தது.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ஊட்டியின் மைய பகுதியில் கரடியின் நடமாட்டம் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அருகில் உள்ள அடர்ந்த வனப்பகு தியான எல்க்ஹில் அல்லது கால் வாய் பகுதியில் இருந்து வந்தி ருக்கலாம். எனவே வனத்துறை யினர் கரடி நடமாட்டத்தை கண் காணித்து கரடியை வனப்பகுதிக் குள் விரட்ட வேண்டும் என்றனர்.  வனத்துறையினர் ஆய்வு இந்த சம்பவம் குறித்து தகவ லறிந்த வனத்துறையினர் ஞாயி றன்று, புது அக்ரகாரம் பகுதிக்கு நேரில் சென்று அங்கிருந்த குடியி ருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தினர். கரடி நடமாட்டம் இருந் தால், பொதுமக்கள் கற்களை  எடுத்து தாக்க முயற்சி செய்யாமல், தகவல் தெரிவிக்குமாறு அறிவு றுத்தினர். ஏற்கனவே கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஊட்டி மத்திய போலீஸ் நிலை யம் முன்பு கரடி வந்தது குறிப்பி டத்தக்கது.