நாமக்கல், ஆக.11- கொல்லிமலையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன டைந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வாழவந்தி நாடு ஊராட்சி ஒன்றியம், செம் மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி மாற்றுத்திறனாளிக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், 14 பஞ்சா யத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற் றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு நிபுணர்கள், குழந் தைகள் மருத்துவர், நரம்பியல் மருத்துவர் போன்ற பல்வேறு மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.