திருப்பூர், நவ. 27 - திருப்பூர் ஒன்றியம்,, இடுவாய் ஊராட்சி பாரதிபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சனி யன்று தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் மருத்துவ முகாம் நடை பெற்றது. இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் மருத்துவ முகாமிற்கு வந்திருந்தோரை வர வேற்று, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அத்துடன் ஈசிஜி அறையையும் திறந்து வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நித்யா முருகேசன், மருத் துவ அலுவலர் டாக்டர் சங்கவி ஆகி யோர் தலைமையில் 50க்கும் மேற் பட்ட மருத்துவ குழுவினரோடு முகாம் துவங்கியது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரம சிவம், திருப்பூர் நிலவள வங்கி இயக்குநர் கே.ஈஸ்வரன், பாரதி புரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம். கணேசன், மணி, பூவதி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பிரபு, கூட்டுறவு சங்க இயக்குநர் ஆதவன், இடு வாய் ஊராட்சி பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமு கர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் வயது முதிர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கள் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் செய் யப்பட்டது. கண் பரிசோதனைக்கு வந்தவர்களில் பாதிப்புள்ள 10 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்கள் அனை வருக்கும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் மொத்தம் 948 பேர் பங்கேற்று தங்களை பரிசோதனைக்கு உட் படுத்திக் கொண்டனர். மிக அதிக மான அளவில் பொதுமக்கள் பங் கேற்று பயனடைந்தது பற்றி மருத்து வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இதுபோன்ற முகாமை நடத்த வேண்டும் என மக்கள் தங்கள் எதிர்பார்ப்பை பகிர்ந்து கொண் டனர்.