மேட்டுப்பாளையம், ஜூன் 24- வன உயிரினங்கள் வாகனங் களில் அடிபடுவதை தடுக்க வனம் சார்ந்த மலையடிவார சாலையில் வேகத்தடை அமைக்க உயர் நீதி மன்ற நீதிபதிகளின் குழு நேரில் ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரை யின்படி, வேகத்தடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் முக்கியமானதாக கருதப்படுவது கோவை மாவட் டத்தின், மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள கல்லார் - ஜக்கனாரி பீட் என்றழைக்கப்படும் வனப் பகுதி. கர்நாடகா – தமிழ்நாடு மற்றும் கேரள வனப்பகுதிகளை இணைக் கும் இப்பகுதி வழியே இடப்பெ யர்வு காலங்களில் ஏராளமான காட் டுயானை கூட்டம் கூட்டமாக வலசை செல்வது வழக்கம். இதுபோன்ற இடப்பெயர்வு காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி மேட்டுப் பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை மற்றும் உதகை செல்லும் சாலைகளை யானைகள் கடந்து செல்கின்றன.
சுற்றுலா முக்கி யத்துவம் வாய்ந்த இச்சாலைகள் நீலகிரி மலையடிவார காட்டை ஊடு ருவி செல்வதால், இவ்வழியே வேக மாக வரும் வாகனங்கள் யானை களை எதிர்கொள்வதும், விபத்துக் கள் ஏற்பட்டு வன உயிரினங்கள் அ டிபடுவதும் வாடிக்கையாக நடை பெற்று வருகிறது. யானைகளின் வழித்தட பாதையில் ஏற்படும் குறுக் கீடுகள் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற் றும் பாரதிதாசன் அடங்கிய நீதி பதிகள் குழுவினர் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று இப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு பின்னர் வனம் சார்ந்த மேட்டுப்பாளையம் - கோத்த கிரி சாலையில் செல்லும் வாகனங் களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏழு முக்கிய இடங்களில் வேகத்தடை அமைப்பது அவசியம் என இக்குழு வினர் பரிந்துரைந்தனர். இதன்படி தற்போது அப்பகுதியில் வேகத் தடை அமைக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. மலை யிலிருந்து கீழிறங்கும் வாகனங் கள் வேகமாக வரும் என்பதால், புதிதாக வேகத்தடை அமைக்கப்பட் டுள்ளது என்பதை குறிக்கும் வகை யில் சாலையில் வெள்ளை வர்ண கோடுகள் போடப்பட்டு வருகிறது. இதன் மூலம் இச்சாலையில் வாக னங்களினால் வன உயிரினங்கள் அடிபடுவதும் திடீரென யானை போன்ற பெரிய விலங்கினங்கள் எதிர்படுவதால் ஏற்படும் விபத்துக் கள் போன்றவை பெருமளவு குறை யும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி யுள்ளது.