districts

img

மே தின கொடியேற்று விழா

சேலம், ஏப்.30- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் மே தின கொடி யேற்று விழா ஜான்சன் பேட்டை சுனில் மைத்ரா நினை வகம் முன்பு நடைபெற்றது. உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி, உலகம் முழுவ தும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக 137 ஆவது மே தின விழா எல்ஐசி காப்பீட் டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து, கொடி யேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட தலைவர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகி பிரபாவதி மே தின கொடியை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து கோட்ட பொதுச்செயலாளர் ஆர்.தர்மலிங்கம் மே தின சிறப் புரையாற்றினார். மேலும் பொதுத்துறைகளை பாதுகாப்போம், எல்ஐசி நிறு வனத்தை தொடர்ந்து பாதுகாக்க தொடர்ந்து பல போராட்டங் கள் நடத்தி பாதுகாக்கப்படும் எனவும், சனாதனத்தை வேர றுப்போம், தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும் என முழக்கங் களை எழுப்பினர். இதில் எல்ஐசி சேலம் கோட்ட ஊழியர் கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.