districts

img

நியாயவிலை கடைகளில் தடையின்றி பொருட்களை வழங்க கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.20 - ஒன்றிய, மாநில அரசுகள் நியாயவிலை கடைகளில் தடை யின்றி பொருட்களை வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஊத்துக்குளி, ராயபுரம், கொங்குநகர் ஆகிய பகு திகளில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடத்தினர்.  ஒன்றிய, மாநில அரசுகள் பொது  விநியோக முறையை சீர்படுத்தக்  கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டம் நடத்த அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாநிலக்குழு அறை கூவல் விடுத்திருந்தது.  அதன்படி மாதர் சங்க ஊத்துக் குளி தாலுகா துணைத்தலைவர் வி. மீராலட்சுமி தலைமையில் செவ்வா யன்று ஊத்துக்குளி டவுன் ஈஸ்வரன்  கோவில் மைதானத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், நியாய விலை கடைகளில் கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள் ளிட்ட அத்தியாவசிய பொருட் களை மாதந்தோறும் அனைவருக் கும் கிடைப்பதை அரசு உத்திரவா தம் செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகள் செயல்படும்  நேரத்தை அதிகப்படுத்த வேண் டும். ஏழை, எளிய மக்களுக்கும், ஒரு  சிலிண்டர் வைத்துள்ள அட்டைதா ரர்களுக்கும் மாதந்தோறும் மண் ணெண்ணெய் வழங்குவதை உத்த ரவாதப்படுத்த வேண்டும். அதற் கேற்ப ஒன்றிய அரசின் மண்ணெண் ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பண்டிகை காலங்களில்  அத்யாவசிய பொருட்களை மலி வான விலையில் வழங்க வேண் டும். ஊத்துக்குளி பேரூராட்சி பகுதி யில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மூன்று நியாய விலை அங்கா டிகளுக்கும், நான்கு அங்கன்வாடி மையங்களுக்கும் சொந்தக் கட்டிடம்  கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டது. இதில், மாவட்டச் செயலாளர் கே.சரஸ்வதி, தாலுகாக்குழு உறுப் பினர் அம்புஜம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஊத்துக் குளி தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்வில் தாலுகா பொருளாளர் வண்ணக் கொடி, லட்சுமி உட்பட பலர் பங்கேற் றனர். தெற்கு நகரம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் தெற்கு நகரக் குழு சார்பில் ராயபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு நகரத்  தலைவர் டி.மினி தலைமை வகித் தார். முன்னாள் மாவட்டத்தலைவர் எஸ்.விஜயா, தெற்கு நகரச் செய லாளர் எஸ்.பானுமதி ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சாவித்திரி, ராயபுரம் கிளை நிர் வாகி கேத்தரின், பரிமளா உட்பட பலர் பங்கேற்றனர். வடக்கு நகரம்: கொங்கு நகர் அம்பேத்கர் கால னியில் வடக்கு நகரப் பொருளா ளர் மேரி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், மாவட் டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி, மாவட்டக்குழு உறுப்பினர் ஈ.வளர் மதி, வடக்கு மாநகரச் செயலாளர் அம்சவல்லி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.